Quantcast
Channel: Book Review – Balhanuman's Blog
Viewing all 178 articles
Browse latest View live

8-தோசையம்மா தோசை – பா.ராகவன்

$
0
0

முதலில் கிருஷ்ணர் கோயில் பிரசாதமாகத்தான் இது வழங்கப்பட்டது. உடுப்பியில் கிருஷ்ணர் கோயில் எழுப்பப்பட்டது கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டு என்பதால் தோசையின் தோற்றமும் அப்போதுதான். [சங்க இலக்கியத்திலெல்லாம் தோசை குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். அதெல்லாம் அநேகமாக புருடா. யாராவது உரிய பாடலை எடுத்துக் கொடுத்தால் மட்டுமே நம்புங்கள்.] கோகுலத்தில் வெண்ணை தின்று வளர்ந்த கிருஷ்ணர் உடுப்பிக்கு வந்தபிறகு தோசை சாப்பிட்டு வாழ ஆரம்பித்தார்.

மாவு என்பது ஏற்கனவே இருந்த வஸ்து. இட்லிக்கு அரைத்தது. சமையல் முறையைச் சற்றே மாற்றி வெகு எளிதாக உலகின் முதல் தோசையை உருவாக்கிப் பார்த்து விட்டார்கள், உடுப்பி கோயில் மடைப்பள்ளி வித்தகர்கள். ஆனால் தொடக்க காலத்தில் தோசையை எண்ணெய் விட்டு வார்த்ததில்லை. வெண்ணை அல்லது நெய்தான்.

AzhagarDosai2

தவிரவும் இன்றைய இடை மெலிந்த தோசைகள் ஆதியில் கிடையாது. தோசை என்றால் நல்ல தடிமனாக, திக்காக இருக்கும். ஒரே ஒரே தோசை சாப்பிட்டு விட்டு அரை நாள் ஓட்டி விடலாம். இன்றைக்கும் கோயில் தோசைகள் அரை விரற்கடை அளவுக்கு கனமாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அது பாரம்பரியம். ஆதியில் தோசையில் மிளகு மற்றும் சீரக சேர்மானம் நிறைய இருந்திருக்கிறது. காலப்போக்கில் தோசைக்கு மிளகு சீரகம் தேவையில்லை என்று உடுப்பியிலேயே எடிட் செய்து விட்டார்கள். ஆனால் கனத்தில் மட்டும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

உணவின் வரலாறு



9-தோசையம்மா தோசை

$
0
0

அவரைக்காய் தோசை – ராம்நகர் ஸ்பெஷல்

பெங்களூருக்கு அருகில் இருக்கும் ராம்நகருக்கு ‘கர்நாடகத்தின் பட்டு மாவட்டம்’ என்றொரு சிறப்புப் பெயர் உண்டு. பட்டுப்பூச்சி வளர்ப்பே இம்மாவட்ட மக்களின் பிரதானத் தொழில். அதுதவிர அவரைக்காய் சாகுபடியும் அதிக அளவில் நடக்கிறது.

ராம்நகர் மாவட்டத்தில் அடங்கிய மாகடி வட்டாரத்தில் ஏராளமான விவசாயிகள் அவரைக்காய் சாகுபடி செய்கிறார்கள். அதனால் ராம்நகர் மக்களின் உணவில் அவரை முதன்மை பெற்று விளங்குகிறது.

அவரைக்காய் சக்தி மிகுந்த காய்கறி. சுண்ணாம்புச் சத்து, வைட்டமின்கள் அடங்கிய இக்காய் செரிமானத்தை ஊக்குவிக்க வல்லது. மன அமைதியைப் பெருக்கிச் சிந்தனையைத் தூண்டக் கூடிய திறன் அவரைப் பிஞ்சுக்கு உண்டு. பித்தக் குறைகளைப் போக்கி பார்வைத் திறனை மேம்படுத்தவும், இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்பைப் போக்கவும் இயற்கை மருத்துவர்கள் அவரைக்காயைத்தான் பரிந்துரைக்கிறார்கள். இதய நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு உள்ளவர்களுக்கும் இது அருமருந்து. இரவில் அவரைக்காயைச் சாப்பிட்டால் சுகமான தூக்கம் வரும். பாலியல் உணர்வைத் தூண்டும் வல்லமையும் அவரைக்கு உண்டு.

கர்நாடக ருசி! - Karnataka Rusi!


10-தோசையம்மா தோசை – பா.ராகவன்

$
0
0

தோசை மெலிந்தது, அது தமிழகத்துக்கு வந்தபிறகுதான். சாம்பார், விதவிதமான சட்னி என்று தோசைக்கான துணைப் பொருள்களைக் கண்டுபிடித்ததும் தமிழர்களே.

அதே சமயம், ரவா தோசை, கோதுமை தோசை என்று தோசையின் ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளை ஆந்திரத்து ரசிகர்கள் கண்டுபிடித்தார்கள். [தோசையை அவர்கள் பெசரெட்டு என்பார்கள்.]

உணவின் வரலாறு

‘ஞானம்பிகா’ ஸ்பெஷல் ரெசிப்பி… ஆந்திரா பெசரெட் தோசை

தேவையான பொருட்கள்:

பச்சைப் பயறு: 1/4 கிலோ
பச்சரிசி: 1/4 டம்ளர்
பச்சை மிளகாய்: 3
பெரிய வெங்காயம்: 2
கறிவேப்பிலை: தேவையான அளவு
பெருங்காயத் தூள்: சிறிதளவு
இஞ்சி: 1 துண்டு

செய்முறை:

பச்சைப் பயறையும், பச்சரிசியையும் நன்றாக அலம்பி நைஸாக அரைக்கவும். அதில் பச்சை மிளகாயை விழுதாக அரைத்து இரண்டு டீ ஸ்பூன் அளவு போடவும். அதனுடன் தேவையான அளவு பெருங்காயத் தூள் மற்றும் சால்ட் போட்டு நன்றாகக் கலக்கவும். கலந்த பிறகு தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றிப் பதமான சூடாகியதும் வழக்கமாக தோசை போடுகிற மாதிரி போடவும்.

வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை நைசாக நறுக்கி, தோசையின் மேல் சிறிதளவு தூவவும். இப்போது ஆந்திரா பெசரெட் தோசை ரெடி.

சமபந்தி

ஒவ்வொரு டிசம்பர் சங்கீத சீஸனிலும் சென்னை நாரதகான சபாவில் ஞானாம்பிகாவின் கேன்டீன் ரொம்பப் பிரபலம். சபாவில் நடக்கும் கச்சேரிகளைக்கூட இரண்டாம் பட்சமாக்கிவிட்டு ஞானாம்பிகாவின் அடை & அவியலுக்கு அணி திரண்டு வருபவர்கள் அநேக‌ர்! இங்கு சாப்பிட வருபவர்களை, வாங்கோ… வாங்கோ.. என்று வாய் நிறைய வாஞ்சையோடு அழைத்து விருந்தோம்பல் செய்யும் ஞானாம்பிகா ஜெயராமனின் குழுவினர் அதிகம் சம்பாதிப்பது நற்பெயரை!

-

தமது நிறுவனத்தின் பெயரை வாசித்தாலே, வயிறு நிறைகிற அளவுக்கு புகழையும் பூரிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறார் ஜெயராமன். தனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியின்றி ஏங்கித் திரிந்த சோகத்தை அவர் சொல்கிறபோது மனது சுருக்கென வலிக்கிறது. வாழ்க்கை ஒவ்வொருவரையும் சுற்றிப் போடும் வலைப் பின்னலையும், அதன் திணறடிப்புகளையும் அவை அழுத்தமாக உரைக்கின்றன. அதே நேரம் உழைப்பும் திறமையும் இருக்குமிடத்தில் கண்டிப்பாக உயர்வு ஓடோடி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதற்கும் இந்த அனுபவங்கள் சாட்சியாகின்றன!

-

தனது வாழ்வில் ஏற்பட்ட வலிகளையும், உள்ளத்தை உளியாக்கி அவற்றை உடைத்தெறிந்த வழிகளையும் தெளிந்த நீரோடையாக ஜெயராமன் சொல்வதை இந்த நூலில் படிக்கும்போது நெகிழ்ச்சியில் நெஞ்சு புடைக்கும். ஒரு சமையல்காரரால் இதெல்லாம் எப்படி சாத்தியமானது!என்ற வியப்பு மனம் முழுக்க வியாபிக்கும்.

-

வறட்டி விற்று ஆகாரத்துக்கு வழி தேடிய ஆரம்ப காலப் போராட்டங்கள் தொடங்கி, சாப்பாட்டு உலகில் எவரும் எட்ட முடியாத அளவுக்கு சாம்ராஜ்யம் படைத்தது வரையிலான தமது அனுபவங்களை இதில் சுவையாக விவரிக்கிறார் ஜெயராமன்.


11-தோசையம்மா தோசை

$
0
0

கர்நாடக ருசி! - Karnataka Rusi!

அவரைக்காயை வைத்து ஏகப்பட்ட உணவுகளைச் சமைக்கிறார்கள் கர்நாடக மக்கள். பெங்களூர் பசவனக்குடியில் ‘அவரை மேளா’ என்று தனியாக ஒரு திருவிழாவையே நடத்துகிறார்கள். தைமாதம் முதல் சனிக்கிழமை அன்று ராம்நகர் பகுதி அவரைச் சாகுபடியாளர்கள் அனைவரும் அறுவடை செய்த காய்களோடு பசவனக்குடியில் உள்ள வெங்கட்ரமணர், ஆஞ்சநேயர் கோவில்களில் சங்கமிக்கிறார்கள். அவரையைச் சமைத்து இறைவனுக்குப் படையலிட்டு ‘அவரை மேளா’வைத் தொடங்குகிறார்கள். இந்த மேளா பத்து நாட்கள் நடைபெறும். அவரையை மூலமாக வைத்து லட்டு, பாதுஷா, மில்க்கேக், சோன்பப்டி, மைசூர்பாகு, பெங்காலி ஸ்வீட் என முப்பதுக்கும் மேற்பட்ட பதார்த்தங்களைச் செய்து அசத்துகிறார்கள். இந்த மேளா வருஷத்துக்குப் பத்து நாள் என்றால், பெங்களூர் வி.வி.சஜ்ஜன்ராவ் சர்க்குலர் சாலையில் உள்ள வாசவி காண்டினெண்டல் இனிப்பகத்தில் ஆண்டு முழுவதும் அவரை மேளா தான். இதன் உரிமையாளர் கீதா, அவரையில் விதவிதப் பதார்த்தங்களைச் சமைத்து லிம்கா சாதனை செய்தவர்.

அவரைக்காய் தோசை ராம்நகரின் ஸ்பெஷல் உணவு. அங்குள்ள எல்லா உணவகங்களிலும் கிடைக்கிறது. நம்மூர் பருப்பு அடையை ஒத்திருக்கும் இந்தத் தோசை, ஈர்க்கும் சுவை கொண்டது.

ராம்நகர் பகுதியில் மிளகாய்ச் சட்னி, புதினாச் சட்னி. அவரைக் குருமா என மூன்று சைடிஷ்கள் தருகிறார்கள். அவரையைப் பொரியலும், துவட்டுலுமாகச் சாப்பிட்டுப் பழகிய நமக்கு அதையே தோசையில் வைத்துச் சாப்பிடுவது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

கர்நாடக ருசி! - Karnataka Rusi!

கர்நாடகத்தின் எல்லா இடங்களிலும் ராகிக்களி கிடைக்கிறது. அகன்ற தட்டில், பெரிய களி உருண்டைகளை உருட்டி வைத்து பஸ்ஸாரு என்ற கீரைச்சாறை
ஊற்றித் தருகிறார்கள். அக்கி ரொட்டிக்கும், கேப்பை ரொட்டிக்கும் கியூவில் நிற்கிறார்கள்.
-
பாண்டவபுரா கோதி அல்வா, சாம்ராஜ்நகர் போண்டா சூப், ஸ்ரீரங்கப்பட்டினம் அக்கிரொட்டி, பெல்காம் குந்தா, மத்தூர் வடை, தாவணகெரே
பென்னாதோசை, மைசூர் பாகு, மங்களூர் கப் இட்லி, கார்வார் பலா இலை இட்லி, பிடதி தட்டே இட்லி, தார்வார் பேடா என கர்நாடகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பாரம்பரிய உணவு உண்டு.
-
இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.
மின்னஞ்சல்:    blackholemedia@gmail.com      செல்பேசி:   9600123146,  
விலை ரூ-75/-

சுஜாதாவின் சிவந்த கைகள் / கலைந்த பொய்கள் —சுரேஷ் கண்ணன்

$
0
0

சிவந்த கைகள்Photoகலைந்த பொய்கள்

நினைவிலிருந்து எழுதுகிறேன். சுஜாதாவின் ‘சிவந்த கைகள்’ என்கிற நாவலின் sequel-தான் ‘கலைந்த பொய்கள்’.

முதல் பகுதியில் ஒரு பாத்திரம் அறிமுகப்படுத்தப்படும்.

சில பல கனவுகளுடன் புதிய அலுவலகத்தில் நுழையும் ஒருவன். அங்கிருக்கும் பழமையான சூழல் உள்ளூற அவனை வெறுப்புறச் செய்யும். ஆனால் மிக மாறுதலாக அவனுடைய immediate boss ஓர் உற்சாக இளம் புயல் போல் இருப்பான். நவீனயுலகின் அடையாளம். அறவுணர்ச்சி பற்றிய பிரக்ஞையெல்லாம் அவனுக்கு கிடையாது. வெற்றி என்ற ஒரு விஷயமே அவனுடைய பிரதான குறிக்கோள். அதற்காக எது தடையாக இருந்தாலும் அதை உடைத்துக் கொண்டு போய்க் கொண்டேயிருப்பான். அவனும் பழமையை வெறுப்பவன். அந்த அலுவலகத்தின் பழமையை கிண்டலடித்துக் கொண்டேயிருப்பான்.

புதிதாக வந்தவனுக்கு அவன் செய்யும் அட்டகாசமான கெட்ட உபதேசத்தால் புதியவனும் அந்த டிராகுலாவால் கடிக்கப்பட்டவனைப் போல் மாறிவிடுவான். ஏறக்குறைய அவனுடைய மனோநிலையையே உபதேசம் செய்வதால் அவனை மிகவும் பிடித்து விடும். அவனையே தன்னுடைய ரோல் மாடலாக நினைக்கத் துவங்குவான். அவனையே தாண்டிச் செல்வதையே தன் கனவாக மாற்றிக் கொள்வான். அதற்காக நாவலின் இறுதியில் ஒரு கொலையையும் செய்யத் துணிவான்.

சுஜாதாவிடமுள்ள ஒரு சிறந்த விஷயம் என்னவெனில் பாத்திரங்களின் மனோநிலையை அங்குள்ள சூழலை மிக நுட்பமாகவும் வலுவாகவும் துல்லியமாகவும் வாசகனுக்கு கடத்தி விடுவார். இதில் அவர் ஒரு மாஸ்டர். புதிதாக சேர்பவனின் அப்பாவித்தனமான குறுகுறுப்பையும் நேர்மை, மண்ணாங்கட்டி என்று எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு தன்னுடைய கனவை அடைய விழையும் அவனுடைய ஆழ்மன ஆவலையும் அதை பெரிதான ஜ்வாலையாக மாறுமளவிற்கு உபதேசம் செய்பவன் ஊதிப் பெருக்குவதையும் அவனுடைய வித்தியாசமான ஆளுமையையும் அற்புதமாக சில பக்கங்களிலேயே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்.

வெகுஜனத்தன்மையைக் கொண்ட நாவல்கள்தான் என்றாலும் அதில் உள்ள, பிரமிப்பை ஏற்படுத்தும் craft-க்காக எழுத விரும்புபவர்கள் அனைவருமே சுஜாதாவை வாசிப்பது நல்லது. அதில் இந்த இரண்டு நாவல்களும் அடங்கும்.

தெவச தினங்கள் போன்று பிறந்த நாளிலும் நினைவு நாளிலும் நினைவு கூராமல் அவர்களுடைய சாதனைகளின் மூலம், ஆழ்மனங்களில் புதைந்திருக்கும் இந்த ஆளுமைகளை அவ்வப்போது இம்மாதிரி நினைவுகூர்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

***

எதற்காக இப்போது இது ஞாபகம் வந்தது என்றால், … The Wolf of Wall Street.… -ன் துவக்கப்பகுதியில் வரும் இரு பாத்திரங்களைக் காணும் போது, தவிர்க்கவேயியலாமல் இந்த நாவல்களும் அச்சு அசலாக அந்த திரைப்படத்திற்கு பொருந்திப் போகும் பாத்திரங்களும் நினைவிற்கு வந்தன.

ஸ்கார்ஸஸி திரையில் சாதித்திருப்பதை எழுத்திலேயே சில வருடங்களுக்கு முன்பேயே சாதித்திருக்கிறார் சுஜாதா எனும் மாஸ்டர்.

சிவந்த கைகள்கலைந்த பொய்கள்

சுஜாதாவின் மாத நாவல் விளையாட்டுகளில் “சிவந்த கைகள்” ஒன்று. மணியன் மாத இதழில் பிரசுரமானது. ஒரு மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் மேனேஜ்மெண்ட் காடர் போஸ்டில் வேலைக்கு நுழையும் இளைஞனொருவன் எளிதில் அடைய முடியாத அதன் உச்சபட்ச உயர் பதவி நோக்கி அதிர்ஷ்டவசமாக முன்னேறுகிறான். துரதிருஷ்டவசமாக அவன் மறைத்து வைத்திருக்கும் ஒரு சின்னக் களங்கம் அவனது லட்சியத்துக்கு முட்டுக்கட்டையாக வர நேரும்போது திடுக்கென அவன் தேர்ந்தெடுக்கும் வழிமுறை, செயல்பாடு, பிராயச்சித்தம் என சுனாமி வேக சுழல் கதை.


5-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்

$
0
0

இதன் முந்தைய பகுதி…

Note from BalHanuman:

இந்தப் பதிவில் ரகு தனது மனைவி லதாவைப் பற்றி போகிற போக்கில் குறிப்பிட்டுச் செல்கிறார்…

Jayaraman Raghunathan

இந்த என் ஸ்கூல் தின மின்னல், மழையாக மாறினது என் காலேஜ் மற்றும் சிஏ வருடங்களில்.

எப்போது?

நினைத்தவுடனே நினைவில் நிரடுவது 1979.

அது நான் லதாவைச் சந்தித்த வருடம் என்பது உபரி தகவல்!

இரண்டு வீடு தள்ளி இருக்கும் சுரேஷ் வீட்டில் கல்கி வாங்குவார்கள். நாங்கள் குமுதம், ஆனந்தவிகடன்.

எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்வோம்.

ஆஃபீசிலிருந்து வரும்போதே வழியில் சுரேஷ், ரகு! உன்னைப்பத்தி சுஜாதா கல்கியில எழுதியிருக்கார்”

“என்னைப்பத்தியா?’

பரபரப்புடன் அப்போதே சுரேஷ் வீட்டுக்கு ஓடிப்போய் பார்த்தேன்.
.
கல்கியில் அப்போது ப்ரபலங்களிடம் அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத கடிதங்கள் பற்றி கடைசி பக்கத்தில் கேட்டு வாங்கிப்போட்டார்கள்.

அந்த முறை சுஜாதா.

“எந்தக் கடிதத்தை எனறு எழுதுவது?

“சின்ன கையெழுத்தில் “உடம்பைப்பார்த்துக்கொள்? வாராவாரம் எண்ணை தேய்த்துக்குளி” என்று எழுதும் அம்மாவின் கடிதத்தையா?’

“என்னுடைய “சசி காத்திருக்கிறாள்” படித்துவிட்டு வவுச்சரின் ஓரத்தில் “அடிக்கடி எழுதுங்கள்” என்று எழுதியிருந்த எஸ் ஏ பியின் கடிதத்தையா?”

கரையெல்லாம் செண்பகப்பூ

கரையெல்லாம் செண்பகப்பூ படித்துவிட்டு ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன் எனக்கு எழுதிய மூன்று பக்க கடிதத்தையா?”

“பதிலையே எதிர்பாராமல் எனக்கு எழுதும் ரகுனாதன் கடிதங்களையா?”

பாருங்கள், என்னை, என் கடிதத்தை எந்த லிஸ்டில் சேர்த்திருக்கிறார் மனுஷன்?

இவரின் மீது எனக்கு வாழ்நாள் கடந்த அன்பு ஏற்படுவதில் ஆச்சரியமே இல்லைதானே?

இன்னொரு மழை….

 ரத்தம் ஒரே நிறம்

சில குயுக்தி மனிதர்களால் அவரின் அபார சரித்திரக்கதை கறுப்பு, வெளுப்பு, சிவப்பு நின்று போயிருந்த நேரம். ஒரு ஆடிட்டுக்காக பெங்களூர் போன நான் அவரின் வீட்டில் இருந்தேன். வேறு சிலரும் அன்று வந்து பேசிக்கொண்டிருந்தனர்.

மிக ப்ரமாதமாக வந்திருக்க வேண்டிய ஒரு சரித்திரக்கதை அகாலமாக முடிவுற்றதில் வெறுத்துப்போய், பேச்சு வாக்கில் நான், “ நமக்கெல்லாம் உறையூரை நோக்கிப் புரவியைச் செலுத்தினார் பெரும்பிடுகு முத்தரையர்” போன்ற கதைகளே சாஸ்வதம்” என்று சொன்னதை அங்கு வந்திருந்த சாவி நிருபர் கேட்டு, அடுத்த இதழ் சாவியில் என்னை மேற்கோள் காட்டி எழுதியிருந்தார்.

ஆங்கிலேய சரித்திரம் அதிகம் தமிழில் எழுதப்படாத களம் என்கிற நினைப்பில் சொன்ன கருத்து அது. அதே சமயத்தில் குங்குமத்தில் சாண்டில்யன் எழுதும் விலை ராணி என்றொரு சரித்திரக்கதை வெளியாகிக்கொண்டிருந்தது. அதை நான் படிக்கவில்லை. ஆனால் அதில் வரும் ஒரு காரக்டர் பெரும்பிடுகு முத்தரையர்!

என்னுடைய வார்த்தைகளினால் கோவப்பட்ட சாண்டில்யன் அடுத்த இதழ் சாவியில் சுஜாதாவை வம்புக்கு இழுத்தது, அதற்க்கு சுஜாதா பதிலடி கொடுத்ததும் தனி சுவாரஸ்யம்!

என்னுடைய unintentional வார்த்தைகளினால் சுஜாதாவுக்கு, சாண்டில்யனோடு அனாவஸ்ய மனவேறுபாடு வந்துவிட்டதே என்று மன்னிப்பு கேட்டேன்.

“விடுய்யா! உம்மேல தப்பேயில்ல” என்று தள்ளிவிட்டார்.

அடிமையின் காதல்  |  adimain kathal  |  

(இந்த ஆங்கிலேயப் பின்னணியில் ரா கி ரங்கராஜன் எழுதிய ”அடிமையின் காதல்” ஒரு அபார கதை )

அந்த இதழ் கல்கியும் சாவியும் கண்டெடுத்து எனக்குக்கொடுத்தால் சுஜாதா சொன்னது போலவே, என் ராஜ்ஜியத்தில் பாதியும் என் பெண்ணையும் கொடுப்பேன்!

தொடரும்…

கரையெல்லாம் செண்பகப்பூ

கரையெல்லாம் செண்பகப்பூ’ ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான் கல்யாணராமன்.அங்கு ஒரு பழைய ஜமீன் மாளிகையில் தங்குகிறான். கிராமத்துப் பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் வள்ளி விரும்புவது அவள் மாமன் மருதமுத்துவை.அந்த மருதமுத்துவை சலனப்படுத்த வந்து சேருகிறாள் நகரத்து நாகரிகப் பெண் சினேகலதா. ஜமீன் வம்சத்து வாரிசாக வருபவள் கல்யாணராமனுடன் அதே ஜமீன் மாளிகையில் தங்குகிறாள். அவள் வந்த பிறகு ஜமீன் மாளிகையைச் சுற்றி நடக்கும் சில அமானுஷ்ய, மர்ம விவகாரங்கள் கல்யாணராமனை பயமுறுத்துகின்றன. உச்சகட்டமாக ஒரு கொலையும் நடைபெறுகிறது. கிராமத்து சூழ்நிலையே தடம் புரண்டு சிக்கலாகிறது. விறுவிறுப்பான இந்தக் கிராமத்து திரில்லர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

அடுத்த கட்டம் –என்.சொக்கன்

$
0
0

என். சொக்கன்

ஆங்கிலத்தில் ‘பிஸினஸ் நாவல்’கள் மிகப் பிரபலம். சாதாரணமான சுய முன்னேற்ற விஷயங்களில் ஆரம்பித்து, சிக்கலான மேலாண்மை நுட்பங்கள்வரை, சகலத்தையும் நூற்றுச் சொச்ச பக்கங்களுக்குள் விறுவிறுப்பான கதை வடிவத்தில் விவரிக்கும் நூல்கள் அங்கே தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பிஸினஸ் நாவல்களின் ஸ்பெஷாலிட்டி, அவற்றை வாசிப்பதற்கு அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ போதும். அந்தக் கதையினூடே நாம் தெரிந்துகொள்ளும் விஷயங்கள், அந்தந்தச் சம்பவங்கள், பாடங்களுடன் மனத்தில் அழுந்தப் பதிந்துவிடும். அதனால்தான் பெரிய பேராசிரியர்கள், மேனேஜர்கள், சிஇஓக்கள்கூட, எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்வதென்றால், முதலில் பிஸினஸ் நாவல், அப்புறம்தான் உரைநடைப் புத்தகங்கள் என்று தேடுகிறார்கள். தமிழில் பிஸினஸ் நாவல்களை அறிமுகப்படுத்திய முதல் முயற்சி, ‘அடுத்த கட்டம்’. குங்குமம் வார இதழில் தொடர்கதையாக வெளியாகி எண்ணற்ற வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.  ஓவியர் ஸ்யாமின் புதுமையான படங்களுடன் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏராளமான உத்திகளைச் சுவையான கதைப்போக்கினுள் பொதித்துவைத்துச் சுவைக்கத் தருகிறது.

Note from BalHanuman

128 பக்கங்களில் தமிழின் முதல் பிசினஸ் நாவல்…

மேலோட்டமாகப் படித்தால் விறுவிறுப்பான கதை. கொஞ்சம் உள்ளே போனால் தங்கப் புதையல்!

மதி நிலையம் வெளியீடு. எண்பதே ரூபாய் விலையில்!

உங்களுக்கு மிக எளிய முறையில் கீழ்க்காணும் பல உத்திகளின் அறிமுகம்…

Six Thinking Hats

ஃபார்முலா டீ

சில சாப்பாட்டு மேஜை ரகசியங்கள்

பணி அழுத்தத்தைக் குறைக்க பத்துக் கட்டளைகள்

உலகப் புகழ் பெற்ற ‘Chicken Soup For the Soul’ வரிசைப் புத்தகங்களை அறிமுகம் செய்த ஜாக் கான்ஃபீல்ட் (Jack Canfield) சுட்டிக் காட்டும் ‘அடுத்த கட்ட’க் கற்பனையின் மூலம் நான்கு நன்மைகள்

வாடிக்கையாளர் சேவைக்கு மிக முக்கியமான அஞ்சு விஷயங்களோட தொகுப்பான – ரேடர் (RATER)

மேலாண்மை நிபுணர், சிந்தனையாளர், எழுத்தாளர் எட்வர்ட் டிபோனோ (Edward deBono) கண்டுபிடித்த (lus) M(inus) I(nteresting) எனும் பிரபலமான Decision Making முறை.

பிரபல மேலாண்மை நிபுணர் வில்லியம் ஆன்கென் (William Oncken) கண்டறிந்த ஆன்கென் ஏணி (Oncken Freedom Scale)

என். சொக்கன்

சொக்கனின் முன்னுரை…

எனது அலுவல் நிமித்தமாகவும், சொந்த ஆர்வம் காரணமாகவும் ஆங்கிலத்தில் பல்வேறு ‘பிசினஸ் நாவல்‘கள் படித்திருக்கிறேன். பல சிக்கலான விஷயங்களைக்கூட, சுவாரஸ்யமான கதை வடிவில் எல்லோருக்கும் புரியும்படி விவரிக்கும் இந்த நாவல்கள் மூலம் நான் அனுபவித்துக் கரைத்த நேரங்களும் நிறைய, கற்றுக்கொண்ட விஷயங்களும் நிறைய.

அனேகமாக, பூமிப்பந்தில் இருக்கும் எல்லா மேலாண்மை, சுயமுன்னேற்றம் சார்ந்த விஷயங்களையும் கதைகளாகச் சொல்லும் இதுபோன்ற நாவல்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி எழும். ‘தமிழில் இப்படி யாரும் முயற்சி செய்யவில்லையே. ஏன் ?’

இந்தக் காலக்கட்டத்தில்தான், குங்குமம் வார இதழுக்காக ஒரு தொடர் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. துணிந்து இந்த ‘பிசினஸ் நாவல்‘ யோசனையை முன்வைத்தேன். ‘தொடர்கதையாக எழுதும்போது, பல வாரங்கள் ஒரே விஷயத்தைச் சொன்னால் கொஞ்சம் போரடிக்கும். அதற்குப் பதிலாக ஒவ்வோர் அத்தியாயத்திலும் புதுசாக, வித்தியாசமாக எதையாவது கதையோடு கலந்து சொல்லலாம்’ என்றேன்.

பொதுவாக, தமிழ்ப் பத்திரிகைகளின் ஃபார்முலாவுக்கு பொருந்தாத இந்த ஐடியாவை ஏற்றுக்கொண்டு அருமையான களம் அமைத்துக் கொடுத்த குங்குமம் ஆசிரியர் குழுவினருக்கு என் நன்றி. குறிப்பாக, தி.முருகன், வள்ளிதாசன் இருவருக்கும், மிக வித்தியாசமான உத்திகளைக் கொண்டு ஓவியங்களை வரைந்து, இந்தத் தொடரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்ற ஓவியர் ஸ்யாமுக்கும், தமிழின் முதல் பிசினஸ் நாவலான இதனைப் புத்தகமாக வெளியிடும் மதி நிலையம் பதிப்பகத்தாருக்கும் நன்றிகள்.

வாய்ப்பிருந்தால் புத்தக வடிவத்தில் வாசித்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்.

என்றும் அன்புடன்,
என்.சொக்கன்,
பெங்களூரு.

என். சொக்கன்


7-மின்னல்-மழை-Motivation – ஜெயராமன் ரகுநாதன்

$
0
0

இதன் முந்தைய பகுதி…

sujatha33

90-களின் தொடக்கத்தில் சுஜாதா சென்னைக்குக் குடி பெயர்ந்து விட்டார். ஆழ்வார்ப்பேட்டையில் வீடு. ஒரு தெரு தள்ளி கணையாழி கி கஸ்தூரிரங்கனின் இல்லம், மற்றும் கணையாழியின் ஆபீஸ். கிட்டத்தட்ட கௌரவ ஆசிரியர் போல கணையாழி இதழை சுஜாதா மேற்பார்வையிட்டார். அவ்வப்போது இபாவும் வருவார். இந்த மூன்று ஜாம்பவான்களும் பொடியனான என்னையும் சில சமயம் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்வதுண்டு- ஒப்புக்குச் சப்பாணியாகத்தான். எனக்கு பாதி நேரம் “ஆ”வென்று வாயைத் திறந்து கொண்டு இவர்களின் பேச்சைக் கேட்பதிலேயே நேரம் போய்விடும்.

ஒருமுறை என் மேல் பரிதாபப்பட்டு கி க ஒரு புஸ்தகத்தைக்கொடுத்து, “இத வேணா ரெவ்யு பண்ணுங்களேன்” என்றபோது, சென்னை மாநகரமே துல்லியமாக அலம்பிவிட்டார்போல இருந்தது. அடுத்த இதழ் கணையாழியில் அது வெளிவந்ததும், சுஜாதா என்னிடம், “ரெவ்யூக்குப் போய்ட்டியா” என்று கிண்டலடித்து, “நன்னா இருந்தது’ என்று சொன்னதை இன்னும் காட்சியும் வசனமும் மாறாமல் freeze செய்து வைத்திருக்கிறேன்.

கட்டையோடுதான் வேகும்.

”அவனிடம் கொடுத்து ஒரு ரிவ்யூ எழுதச்சொல்லுங்கள்” என்று வாத்யார் ரெகமெண்டேஷன் – எனக்கு பின்னால்தான் தெரியும்!

அப்போது மாதமொருமுறை கிக வீட்டில் கணையாழி கவிதைக்கூட்டம் நடைபெறும். அது ஒரு அபார தினம். மாடியில் அசௌகரியமாக சுருங்கி சுருங்கி பின் பாகத்தை அறுத்து எடுக்கும் ஜமக்காளத்தில் பாட்டரி மைக்குடன் சுஜாதா, கிக மற்றும் கணையாழியில் வெளிவந்த கவிதைகளின் கலைஞர்கள் கூடுவார்கள். ஓரிரு முறை ஞானக்கூத்தனும் கலந்து கொண்டிருக்கிறார். அழகியசிங்கர், லக்ஷ்மிகுமாரன் ஞானதிரவியம், சி. ஸ்ரீதரன், சுஜாதா விஜயராகவன் போன்ற கணையாழிக்கவிஞர்கள் கலந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

சுஜாதா எடுக்கும் பாடம் அட்சர லட்சம் பெறும்.

Humor at his best!

“நீங்க ரொம்ப constipation ல எழுதினா மாறி இருக்கே“

“இந்த மலர், இயற்கை, மங்கை இதெல்லாம் சங்க காலத்தோட ஓவர். இனிமே try பண்ணாதீங்க”

“இந்த முப்பத்தாறு வரி கவிதையில் முப்பத்தைந்து வார்த்தை விரயம்”

செமத்தியா கோட்டா பண்ணுவார். கூட்டம் முடிந்த பின்பு, அந்தக்கவிஞருடன் அன்னியோன்னியமாக வாத்சல்யத்துடன் பேசுவார். புரிய வைப்பார்.

ஒரு கூட்டத்தில் அத்தை கவிதை படிக்கப்பட்டது. அது சென்ற இதழ் கணையாழியில் பிரசுரமாகி இருந்தது. (இதே கணையாழி இதழில் முருகன் ஜியின் புத்தக விமரிசனமும் கடைசி பக்கத்தில் நம் நண்பர் Chandramowli பற்றி சுஜாதா எழுதியிருந்ததும் ஒரு ஆச்சரிய coincidence!)

அப்போதுதான் சுஜாதாசொன்னார்

“இந்த அத்தை கவிதையில் இருப்பது உண்மை போன்ற கற்பனை. முதலில் என்னை அவ்வளவாகக்கவரவில்லை. ஆனால் அத்தையே இல்லாமல் அத்தை பற்றி வாழ்க்கைக்கு வெகு அருகில் உள்ள சம்பவங்களை கவிதையாக்குகிறது என்று நினைக்கிறேன்”.

கூட்டம் முடிந்த பிறகு கவிஞருடன் பேசினபோது நான் இருந்தேன்.

“நல்ல கற்பனை. ரொம்ப ரியலிஸ்டிக்கா இருந்தது. ஆனால் வார்த்தைகள் போறவே போறாது. கிட்டத்தட்ட ரெண்டு பக்கம் முழுக்க வந்திருந்த இந்தக்கவிதையை அரைப்பக்கத்தில் எழுதியிருக்க வேண்டும். நீயே மறுபடி படிச்சுப்பார், ஒனக்கே புரியும்.”

கவிஞர் மெளனமாக தலை ஆட்டிகொண்டு இருந்தார்.

“இன்னொரு விஷயம் என்று தொடர்ந்தார் சுஜாதா.

“அடுத்த மூணு மாசத்துக்கு இன்னொரு கவிதை எழுதாதே”!!

“சரி சார்”

மூணு மாசம் இல்லை, இந்த 23 வருஷங்களில் நான் வேறு கவிதை எழுதவே இல்லை!!

https://www.nhm.in/img/978-81-8493-520-2_b.jpg

கணையாழி ஆஃபீசின் மாடியில் வெள்ளை வேட்டி வெள்ளை கதர் சட்டையோடு கி க உட்கார்ந்திருப்பார். பல முறை போய் பேசி இருக்கிறேன். அதிகம் சுஜாதா பற்றித்தான். அவன் என்றுதான் விளிப்பார். ஆனால் சுஜாதாவின் மேல் மிகுந்த ப்ரேமை உடையவர். 6 9 61 போல் ஒரு கதை இதுவரை படித்ததே இல்லை என்பார். கணையாழி சரித்திரத்திலேயே மிக அதிகம் கடிதங்கள் வந்த கதை அது என்றார்.

”கஸ்தூரிரங்கன் போல ஒரு ஆசிரியர் கிடைத்ததற்க்கு நான் போன ஜென்மத்தில் யாரோ ஒரு அந்தணருக்கு ஆட்டுக்குட்டி தானம் செய்திருக்க வேண்டும்” என்று ஒரு முறை சுஜாதா எழுதியிருந்தது நினைவில் இருக்கலாம்.

கணையாழிக்காக இத்தனை செய்திருக்கிறாரே, ஆனால் அவர் அது பற்றி பேசுவதைக்கேட்டால் ஒரு பற்றற்ற தன்மைதான் தெரியும். இமோஷனல் சைடே இல்லாமல் ஒரு வித மூன்றாம் மனிதத்தன்மையோடுதான் கணையாழி பற்றி பேசுவார்.

ஒரு சமயம் பெண் எழுத்தாளர் பற்றின சர்ச்சை ஒன்றைப்பற்றி நான் ஏதோ சொல்லப்போக, “ அலையாதே வம்புக்கு” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, “ எல்லா இஷ்யூவுக்கும் இன்னொரு பக்கம் உண்டு. அது தெரியாமல் ஜட்ஜ்மெண்டலாக ஏதும் பேசக்கூடாது” என்று சொன்னதை நான் இன்று வரை என் ஆஃபீசில் கடைபிடிக்கிறேன்.

தொடரும்…

https://www.nhm.in/img/978-81-8493-520-2_b.jpg

கணையாழியில் தொடராக வந்த கதை. பொருத்தமில்லாதவருடன் மணவாழ்க்கையில் இணையும் ஒரு பெண், பின்னர் தனக்கு உகந்தவனைக் கண்டுபிடிக்கிறாள். ஆச்சரியமூட்டும் வகையில், அவர்கள் நட்பு மனம் சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது. ஆனாலும், அவர்கள் வாழ்வில் இதனால் ஏற்படும் விளைவுகளால் பரபரப்புக்கும் விறுவிறுப்பும் குறைவில்லை.

சுஜாதாவின் முன்னுரை

http://www.maheshwaran.com/images/stories/2010/may10/sujatha.jpg

’6961 ‘ கணையாழியில் வெளி வந்தது.  ’6961 ‘ என்கிற தலைப்பைத் திருப்பிப் போட்டால் 1969 .  இந்தக் கதையை நான் எழுதிய வருஷம் அது.  கணையாழி 1965 -ல் தொடங்கியதிலிருந்து அதில் தொடர்ந்து,  ‘நீர்க்குமிழிகள்‘ ,  ‘கடைசிப்பக்கம்‘  என்று ஒரு பக்கம் எழுதி வந்தேன்.  ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் ஒரு தொடர்கதை எழுதச் சொன்னார்.  அதை பரபரப்பாக முன் இதழில் அறிவித்தார்.  சுஜாதா கதை வரப் போகிறது என்றால் கணையாழியின் சர்க்குலேஷன் பன்மடங்காக உயரும் என்று அவர் எதிர்பார்த்திருந்தால் ஏமாற்றம்தான்.  கணையாழி போன்ற சிறு பத்திரிகைகளுக்கு என்று ஒரு ஆதரவாளர் குழாம் இருந்தது.  அதில் கடிதம் எழுதுபவர்கள்,  கதை, கவிதை எழுதுபவர்கள், இவர்களைப் படிக்க மிஞ்சிப் போனால் 2,000 பேர் இருந்தார்கள்.  இது 20,000 ஆகவோ 2 லட்சமாகவோ சாத்தியமில்லை என்பதைத் தான்  6961 நிரூபித்தது.  நான் கணையாழியில் எழுத்தும் கதை என்பதற்காக உபரியாக நெற்றியைச் சுருக்கிக் கொண்டு இன்டலெக்சுவலாக யோசித்து பிரயத்தனம் எதுவும் செய்யவில்லை.  மற்ற பத்திரிகைகளில் எழுதுவது போல்தான் எழுதினேன்.

கணையாழிக்கு ஒரு பேனா, குமுதத்துக்கு ஒரு பேனா என்பது என் வழக்கமில்லை.  கணையாழியில் நான் அதிகம் கதைகள் எழுதவில்லை என்பது உண்மை.  இதுவே நான் அதன் இலக்கிய அந்தஸ்துக்குத் தந்த மரியாதையாக இருந்திருக்கலாம்.

6961
 -ன் மறுபதிப்பை நான் நண்பர் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு அர்ப்பணிக்கிறேன்.

–சுஜாதா

 



3-காலத்தை வென்ற இளையராஜா பாடல்கள்…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரங்களில் தேடி எடுத்த நாட்டுப்புறப் பண்களையும், சென்னை மயிலாப்பூர் சாய் லாட்ஜில் தன்ராஜ் மாஸ்டரிடம் செய்த குருகுலவாசத்தால் வந்த மேற்கத்திய இசை வாசங்களையும் அன்னக்கிளியின் சிறகுகளில் மெல்லத் தெளித்தார் இளையராஜா. அந்த முதல் படத்திலேயே இளையராஜாவின் வெல்லும் இசையில் மூன்று பாடல்களில் ஓங்கி ஒலித்தார் ஜானகி (1976).

முந்தைய இசை அலையில், ஒரு படத்தில் பெண் குரலுக்கான பெருவாரியான பாடல்களையும் பி.சுசீலா பாடுவார்…ஒன்றிரண்டு ஜானகி போன்றவர்களுக்குக் கிடைக்கும்.

–நன்றி http://ilayaraja.forumms.net/

ஆனால் இளையராஜா அலையின் ஆரம்பப் படத்திலேயே இந்த முறை தலைகீழாக மாறியது. அன்னக்கிளியில் ஜானகி மூன்று பாடல்கள் பாடினார்… சுசீலா ஒரு பாடல் பாடினார். (இளையராஜா கிட்டார் கலைஞராக இருந்த போது, சுசீலாவுக்கும் அவருக்கும் ஒரு மோதல் ஏற்பட்ட சம்பவத்தை சில இசைக்கலைஞர்கள் சொல்லக் கேட்டதுண்டு…).

எப்படியோ, இன்னிசை இளவலாகத் தொடங்கி, ஆண்டுகள் செல்லச் செல்ல, படத்தின் பெயருக்கு மேலே தன் பெயர் இடம் பெறும் (The name above the title) மிதமிஞ்சிய செல்வாக்கைப் பெற்றார் இளையராஜா. அவரது இசை வட்டத்தில் தலைமைப் பாடகியாக ஜானகி விளங்கினார்.

–திரை இசை அலைகள் (தமிழ் நாடு அரசின் முதல் பரிசு பெற்ற நூலின் இரண்டாம் பாகம்) – வாமனன்


2-அவள் அப்படித்தான் – சில நினைவுகள் – வண்ணநிலவன்

$
0
0

இதன் முந்தைய பகுதி…

–நன்றி http://ilayaraja.forumms.net/

ராயப்பேட்டை கௌடியா மடத்துக்கு அருகே உள்ள சந்தினுள் ஒரு பிரிவியூ தியேட்டர் இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமை ‘சோமனதுடி‘ (1975) படம் பார்ப்பதற்காக அந்தப் பிரிவியூ தியேட்டருக்கு நானும் ஜெயபாரதியும் போயிருந்தோம். அங்கே படம் பார்க்க வந்திருந்த ருத்ரைய்யாவை ஜெயபாரதி எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இப்படித்தான் எனக்கும் ருத்ரைய்யாவுக்குமான நட்பு தொடங்கியது. அப்போது ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் தங்கியிருந்தார்.

அவரது நீண்ட நாள் கனவுகளில் ஒன்று தி.ஜானகிராமனின் “அம்மா வந்தாள் நாவலைப் படமாக்க வேண்டும் என்பது. அதற்கான திரைக்கதை வசனத்தைக் கூட நான் எழுதினேன். கதைவசனத்தை எடுத்துக் கொண்டு டெல்லி சென்று தி.ஜானகிராமனைப் பார்த்தேன். அனுமதியும் தந்தார். ஆனால் அது ஏனோ படமாக்கப்படவேயில்லை.

திரைப்படக் கல்லூரியை முடித்தவுடன் படக் கம்பெனியைத் துவங்குவதற்கான வேலைகளில் இறங்கினார். அவருடைய அக்காள் கணவர் உதவியுடன் ‘குமார் ஆர்ட்ஸ்‘ என்ற கம்பெனியைத் துவங்கினார்.   ஆழ்வார்ப்பேட்டையில் பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலாவின் வீட்டுக்கு அடுத்த பங்களாவில் ‘குமார் ஆர்ட்ஸ்‘ இயங்கத் தொடங்கியது. இந்த இடத்தில் தான் ‘பராசக்தி‘ படத்தைத் தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் கம்பெனியும் முன்பு இருந்தது.

–நினைவுகள் தொடரும்…

குமுதத்தில் அரசு பதில் பகுதியில்:
கேள்வி: சோமனதுடி பார்த்தீர்களா?
பதில்: இல்லை. ஆனால் சோமனதுடி பார்த்து துடிதுடி என்று துடித்தவர்களைப் பார்த்தேன்.

(எஸ்.ஏ.பி.க்கு உண்மையில் சோமனதுடி படம் பிடித்திருந்தது என்றும் ஆனால் அது சராசரி குமுதம் வாசகனுக்கு பிடிக்காது என்பதால் இப்படி கிண்டல் அடித்தார் என்றும் படித்திருக்கிறேன்.)


மொசார்ட் –இளையராஜா –பா.ராகவன்

$
0
0

மொஸார்ட்

மொசார்ட்டை எனக்குப் பிடிக்கும். எத்தனை பிடிக்கும் என்றால் எனக்கு இளையராஜாவைப் பிடிக்கும் அளவுக்கு மொசார்ட்டையும் பிடிக்கும். பல சமயங்களில் ராஜாவுக்கும் மொசார்ட்டுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை என்று தோன்றும். இப்படிச் சொல்வதை சனாதனவாதிகள்  அபத்தம் எனலாம். அது குறித்து எனக்குக் கவலையோ அக்கறையோ கிடையாது. மொசார்ட்டை நான் இளையராஜா மூலமாகத்தான் அறிந்தேன். ராஜாவின் பல வேலைப்பாடுகளில் மொசார்ட்டின் தாக்கத்தைப் பார்த்திருக்கிறேன். இது மகனுக்கு இருக்கும் தந்தையின் ஜாடை போன்றது. ரொம்ப உள்ளே போக எனக்கு விருப்பமில்லை. நான் இசைக்கு ரசிகன். என்னளவில் இசை என்றால் இளையராஜா மட்டுமே. மகன் வழி தந்தையைக் கண்டடைந்தவன் என்பதை மட்டும் மறக்காமல் சொல்லிவிட வேண்டும்.

இந்தப் புத்தகம் ப்ராடிஜி வெளியீடாக முதலில் வெளிவந்தது. நான் ரொம்ப ஆசை ஆசையாக எழுதிய புத்தகம் இது. இந்த ஒரு சிறு நூலுக்காகக் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் மொசார்ட்டின் அத்தனை இசைக்கோலங்களையும் இடைவிடாமல் கேட்டேன். பலவற்றை ஏற்கெனவே கேட்டிருந்தாலும் அத்தனை நுணுக்கமாக முன்னர் கேட்டிருக்கவில்லை. எனக்கென்னவோ மொசார்ட்டின் இசை என்பது அவரது வாழ்வின் மொழிபெயர்ப்பாகவே எப்போதும் தோன்றும். ஏழைமையும் நிராகரிப்பும் அவலங்களும் வேதனைகளும் எந்தக் கலைஞனுக்கு இல்லை? ஆனால் தன்னைத்தானே விழிப்புடன் கவனித்து, தனது வாழ்வை இசையில் எழுதி வைத்தவர்கள் அதிகமில்லை.

யானி - இசைப் போராளி

மிகப் பிற்காலத்தில் யானி இதனைக் கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறார். (யானி குறித்த என்னுடைய புத்தகத்தில் இது பற்றிய விவரங்கள் விரிவாகவே இருக்கும்.) இந்தியாவில் பூபேன் ஹஸாரிகா, நௌஷாத் போன்ற வெகுசிலர் முயற்சி செய்திருக்கிறார்கள். ராஜா ஏன் செய்யவில்லை என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமூட்டும் வினா.

இருக்கட்டும். இந்தப் புத்தகத்தில் மொசார்ட்டின் வாழ்க்கைச் சுருக்கத்தை எழுத நான் தேர்ந்தெடுத்த சொற்களின் ஊடாக அவரது இசை ஒலிக்க வேண்டும் என்ற பேராசை எனக்கு இருந்தது. நீங்கள் இதற்குமுன் மொசார்ட்டைக் கேட்டிருக்கக்கூட வேண்டாம். ஆனால் இதைப் படிக்கும்போது உங்கள் காதுகளில் ஒரு சங்கீதம் ஒலிக்க வேண்டும். அப்படி ஒலித்துவிட்டால் அது அவரது சங்கீதமாகத்தான் இருக்கும்.

எப்பேர்ப்பட்ட பேராசை! ஆனால் அந்தப் பேராசைதான் என்னை இந்த நூலை எழுதவைத்தது.

இதுநாள் வரை நான் எழுதிய அனைத்திலும் பார்க்க, மொழி ரீதியில் எனக்கு மிகவும் உவப்பான புத்தகம் இதுவே. எல்லாமே சரியாக உட்கார்ந்துவிட்டது என்று ஒரு நினைப்பு. யார் யாருக்காகவோ என்னென்னவோ செய்கிறோம். இந்தப் புத்தகம் எனக்காகவே நான் எழுதிக்கொண்டது.

Andhimazhai Image

எனக்கு 43 வயதாகிறது. பல வீடுகள் மாறியிருக்கிறேன். பல ஊர்கள் மாறியிருக்கிறேன். பல நிறுவனங்களில் பணியாற்றி இடம் மாறியிருக்கிறேன். பல நண்பர்கள் இருந்திருக்கிறார்கள். பல உறவினர்கள் இருந்திருக்கிறார்கள். பலர் உதிர்ந்திருக்கிறார்கள். புதிதாகப் பலர் இணைந்திருக்கிறார்கள். நானே கூட எப்படி எப்படியெல்லாமோ இருந்து என்னென்னவாகவோ மாறியிருக்கிறேன். என் விருப்பங்கள், ரசனைகள், ஆர்வங்கள் யாவும் காலம்தோறும் மாறி வந்திருக்கிறது. நினைவு தெரிந்த நாளாக இன்றுவரை எந்த மாற்றமும் இல்லாமல் என் மனத்துக்குள் நான் ஆராதிக்கும் ஒரே விஷயம் இளையராஜாவின் இசை. தெய்வாம்சம் பொருந்திய அந்த மாகலைஞனுக்கு இந்த நூலை என் எளிய சமர்ப்பணமாக முன்வைப்பதில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன்.

இனி இது உங்களுடையது.

மொஸார்ட்

[விரைவில் FreeTamilEbooks மூலம் விலைமதிப்பற்ற மின்னூலாக வெளிவரவிருக்கும் தனது 'மொசார்ட்' புத்தகத்துக்கு பாரா எழுதிய புதிய முன்னுரை.]

இருநூற்றைம்பது வருடங்கள், இன்னும் சுரந்துகொண்டேதான் இருக்கிறது. உலகம் பருகிக்கொண்டேதான் இருக்கிறது. ஆம். மொஸார்ட்டின் இசைக்கு நிகராக இன்னொரு இசை இன்றுவரை இல்லை. நிச்சயம் ஒருநாள் சிம்ஃபொனி எழுதுவாய் என்று இன்னொரு இசை மேதையான பாக்கினால் சிறுவயதில் ஆசிர்வதிக்கப்பட்டவர் மொஸார்ட். சிம்ஃபொனி மட்டுமா எழுதினார்? இன்றுவரை நம் காதில் விழும் அநேக இசை வடிவங்கள் அவர் அளித்தவைதான். நூற்றுக்கணக்கான இசை அமைப்பாளர்களின் ஒரே பெரிய ஆதர்சமும் அவர்தான்! யாராலும் அடையமுடியாத கலை உயரங்களை அடைந்தவை மொஸார்ட்டின் இசை. காலம் உள்ள அளவும் வாழும் இசையை வழங்கியவரின் வாழ்க்கை வரலாறு இது. அதை மொஸார்ட்டின் இசைக்குறிப்புகள் ஆமோதிக்கின்றன.

1-சுஜாதா பற்றி பாலு மகேந்திரா…

$
0
0

http://balhanuman.files.wordpress.com/2010/05/logotimepass.jpg?w=300

“போன டிசம்பர்னு நெனைக்கறேன். மனசளவில் நான் ரொம்பவும் உடைஞ்சு போயிருந்த ஒரு நாள். அந்த மாதிரி சமயங்கள்ல நேரா என் ரங்காகிட்டப் போய் நிக்கறதுதான் என் வழக்கம். உங்கள் எல்லாருக்கும் அவர் சுஜாதா. எனக்கு அவர் ரங்கா.”

‘எனது பால்யகால நண்பர்களெல்லாம் என்னை ரங்கான்னுதான் கூப்பிடுவானுங்க. அவனுங்கெல்லாம் செத்துப் போயிட்டானுங்க. இப்போ பாலு மட்டும்தான் என்னை ரங்கான்னு கூப்பிட்டுக்கிட்டிருக்கிராரு.’ ‘கற்றதும் பெற்றதும்’ தொடர்ல இப்படிப் பதிவு பண்ணியிருந்தார்.

முப்பது வருஷ நட்பு. ரொம்ப நெருக்கம். அவரை என் கூடப் பொறந்த அண்ணனாத்தான் நான் நெனைச்சேன்.

‘பாலுவுக்கும் எனக்குமான நட்பு வாழ்வின் சுக துக்கங்களுக்கு அப்பாற்பட்டது’ அப்படின்னு இன்னுமொரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

மனசு நெறைஞ்ச துக்கத்தோட அவர் முன்னாடி போய் நின்னது தான் தெரியும். உடைஞ்சு அழுதிட்டேன். குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதுக்கிட்டிருந்த என் கையைப் புடிச்சுத் தன் கைக்குள்ள பொத்தி வெச்சுக்கிட்டு அழுது முடியட்டும்னு அமைதியா உட்கார்ந்திருந்தார்.

என் அழுகை கொஞ்சம் நின்னதும், ரொம்பவும் கனிவான குரல்ல என் முகத்தைப் பார்த்துக் கேட்டார். ‘என்னப்பா ஆச்சு ?’

சொன்னேன்.

ரொம்ப ரொம்ப நம்பிக்கையான ஒருத்தர் எனக்குச் செய்திருந்த வஞ்சனை, ரங்காவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கணும். ஆனா அத வெளிக்காட்டிக்கல்ல. அவர் கைக்குள்ள இருந்த என் கையை இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கிட்டுச் சொன்னார்…

“பாலு, நீ பார்க்காத பிரச்சினையா? நீ அனுபவிக்காத துக்கமா ? எல்லாத்தையும் கடந்து வந்தவனில்லையா நீ ? அதெல்லாத்துக்கும் முன்னாடி இது ஜுஜுபி… This is nothing… தூக்கிக் கடாசிட்டுப் போயிட்டே இரு. Don’t let this unworthy person ruffle you. நீ செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு.

ஒரு Heart Problem ஒரு Stroke. இது ரெண்டுக்கப்புறமும் நீ ஜம்முன்னு நடமாடிக்கிட்டிருக்கே. Isn’t this wonderful ? Be happy that you are alive Balu. உன்னை நெஞ்சுக்குள்ளே வெச்சுப் பூஜிக்கற நிறையப் பேர் இருக்காங்க. அவங்களுக்காக நீ செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. You still can create Magic.

உன் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ மாதிரி நீ இன்னும் அஞ்சாறு படங்களாவது பண்ணணும். So don’t let these stupid things bother you. You are a king Balu. Don’t you ever forget that.”

அதுக்கப்புறம் அவரோடு ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து, மாமி போட்டுக் குடுத்த டிகிரி காபி சாப்பிட்டுத் திரும்பி வர்றப்போ மனசு ரொம்ப லேசாயிட்ட மாதிரி ஒரு feeling.

இதன் இறுதிப் பகுதி நாளை…


2-சுஜாதா பற்றி பாலு மகேந்திரா…

$
0
0

இதன் முந்தைய பகுதி…

sujatha33

என் ரங்காவை நான் கடைசியாப் பாத்தது அன்னிக்குத்தான்.

“Be happy that you are alive Balu” ன்னு சொன்ன என் ரங்கா இப்போ இல்லை.

அவர் இறுதிச் சடங்குகளுக்குப் போய் வந்ததோட சரி. அதுக்கப்புறம் அவர் வீட்டுக்குப் போகல்ல. அந்தம்மாவைப் பாக்கற தைரியம் இன்னும் வரல்ல. ஆறுதல் சொல்றதுக்குன்னு போய், அவங்க முன்னாடி நானே உட்கார்ந்து அழுதிட்டு வர இஷ்டமில்லை.

நேத்து ஆஃபீஸ்ல எதையோ தேடுறப்ப மிம்மியோட இந்த ஃபோட்டோஸ்
கண்ல பட்டுது. ‘மிம்மி’ ங்கறது ரங்கா வீட்டில் வளர்ந்த செல்லப் பிராணியின் பெயர். பெண் நாய், டேஷ் ஹவுண்ட் ஜாதி.

அவரை விட மிம்மி மேல அந்தம்மாவுக்குப் பாசம் அதிகம். செல்லம் அதிகம். ‘மிம்மி’யோட முதல் பிரசவம் அவங்க மடியிலேயே நிகழ்ந்ததுன்னா பாருங்களேன். பழைய பெட்ஷீட் ஒண்ணை மடியில விரிச்சுப் போட்டு, பிரசவ வலி கண்ட மிம்மியைத் தூக்கி மடியில வெச்சுக்கிட்டாங்க.

ஏழெட்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயம்… மிம்மியை வீட்ல தனியே விட்டுட்டுப் போகணுமேங்கறதுக்காகவே, அமெரிக்காவில் இருக்கற மகன்களைப் பார்க்கப் போறதைத் தள்ளிப் போட்டுக்கிட்டு வந்தாங்க.

விஷயம் தெரிஞ்சதும் நான் சொன்னேன்:

“நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா அமெரிக்கா போய் பசங்களைப் பாத்திட்டு வாங்க. நீங்க வர்ற வரைக்கும் மிம்மியை நான் என் வீட்ல வெச்சுப் பாத்துக்கறேன்.”

ரங்காவும், மாமியும் அமெரிக்கா போய் வர்ற வரைக்கும் ஆறு ஏழு மாசம் மிம்மி எங்க வீட்லதான் இருந்திச்சு. எங்க சுப்பிரமணியோட சேத்து மிம்மியையும் பாத்துக்கிட்டோம்.   சுப்பிரமணி-ன்னா – ‘மூன்றாம் பிறை’ சுப்பிரமணி. வளர்ந்து பெரியவனாகி எங்க கூடத்தான் இருந்தான்.

மிம்மி பெண் நாய் என்கிறதால சண்ட சச்சரவில்லாம நல்ல சிநேகிதமாகவே இருந்துச்சுங்க. சுப்பு இவளைப் பாலியல் கண்ணோட்டத்தில் அணுகாமல் பார்த்துக் கொள்வதே எனக்கும் அகிலாவுக்கும் பெரிய வேலையாகி விட்டது.

ரங்காவும், மாமியும் அமெரிக்காவில் இருந்து வந்ததுக்கப்புறம், மிம்மியை அவங்களுக்குத் திருப்பிக் குடுக்க என் அகிலாவுக்கு மனசே இல்லை.

ஒருபடியா அவளைச் சமாதானப்படுத்தி மிம்மியைக் கொண்டு போய்க் குடுத்திட்டு வந்தேன்.

இப்போ என் ரங்கா இல்லை. சுப்பிரமணி இல்லை. மிம்மியும் இல்லை. முதல்ல போனது சுப்பிரமணி. அதுக்கப்புறம் மிம்மி. போன ஃபிப்ரவரியில ரங்கா…

நிறைவடைந்தது.


இந்தக் கணம் மட்டுமே உங்களுடையது! –என்.கணேசன்

$
0
0

ganesan

நம்முடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே.

கடந்து போன காலத்தை இனி மாற்ற முடியாது. நல்லதோ, கெட்டதோ முடிந்ததெல்லாம் வாழ்க்கையின் வரலாறு ஆகி விட்டது. கடந்த காலத்தில் பயணித்து நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நம் விருப்பப்படி மாற்றி விட முடியாது.

எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி தான். இனி மிஞ்சி இருக்கும் காலம் எத்தனை, அதில் நடக்க இருப்பதெல்லாம் என்னென்ன என்பதை நாம் அறிய மாட்டோம். எதிர்கால நிகழ்ச்சிகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.

இப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும், நம் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய நிகழ்காலத்தை நாம் வீணடிப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.

இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி நடந்து கொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். நம்மால் செயலாற்ற முடிந்த இந்த ஒரு கணத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நாம் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்து கொள்கிறோம்.

நவீன மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் சர் வில்லியம் ஓஸ்லர் (Sir William Oslerதன் மேசையில் நம் மகாகவி காளிதாசரின் ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை எப்போதும் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று என்பது வெறும் கனவு

நாளை என்பதோ கற்பனை மட்டுமே

இன்று சிறப்பாக வாழ்ந்தால்

அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்

நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்

அதனால் இன்றைய தினத்தைக் கவனி

அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது

நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான். நேற்றைய வருத்தங்களும், நாளைய கவலைகளும் தான் அதிகமாக நம் நிகழ்காலத்தைத் திருடிக் கொள்கின்றன. கடந்த காலத்தில் அப்படியாகி விட்டதே, இப்படியாகி விட்டதே என்று வருத்தப்பட்டும், நாளை என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டும் என்ன பயன்? வருத்தப்படுவதால் கடந்தகாலம் மாறி விடுமா? கவலைப்படுவதால் எதிர்காலம் தானாக சிறந்து விடுமா?

காளிதாசரின் இன்றைய தினம் கூட சற்று அகலமான காலம் என்று சொல்லலாம். இன்றில் கூட இன்றைக்குட்பட்ட கடந்த காலம், எதிர்காலம் என்பதும் அடங்கி விடுகிறது. உண்மையில் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் சூட்சுமம் இந்தக் கணத்தில் தான் உள்ளது. இந்தக் கணத்தில் தான் நாம் ஏதாவது செய்ய முடியும். நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான கணம் இந்தக் கணம் தான்.

இருட்டில் ஒரு நெடும்பயணம் காரில் போக வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தனை தூரமும் தெருவிளக்குகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தால் போதும். அத்தனை தூரத்தையும் சிரமம் இல்லாமல் கடந்து விடலாம். காரின் முன் விளக்குகளால் சில அடி தூரம் தான் வெளிச்சம் தர முடியும் என்பதால் பயணக்கடைசி வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நகைப்பிற்கிடமாகுமோ, அப்படித்தான் எதிர்காலம் முழுவதற்கும் தயார்படுத்திக் கொள்வதும்.

தாமஸ் கார்லைல் மிக அழகாகக் கூறுவார். “நம்முடைய முக்கிய வேலை தூரத்தில் மங்கலாகத் தெரிவது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதல்ல, நம் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து அதை சிறப்பாகச் செய்வது தான்”. அப்படித்தான் இந்தக் கணத்தை நாம் சிறப்பாக உபயோகித்தால், அப்படியே ஒவ்வொரு கணம் நம் வாழ்க்கையில் வரும் போதும் சிறப்பாக பயன்படுத்தினால், எதிர்காலம் தானாக சிறப்பாய் உருவாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.

நேற்றைய நிகழ்வுகளில் இந்தக் கணத்தில் ஏதாவது பாடம் உணர்வோமானால் அது நம்மை பக்குவப்படுத்தும். நாளைய நாளின் சிறப்புக்காக திட்டமிட்டு இந்தக் கணத்தில் ஏதாவது செய்வோமானால் அது நம்மை முன்னேற்றும். ஆக இந்த நாளில் இந்தக் கணத்தில் நாம் செய்வதை வைத்துத் தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் நாம் சிறப்பை ஏற்படுத்த முடியுமே தவிர அவற்றைக் குறித்த வருத்தங்களாலும் கவலைகளாலும் அல்ல.  அப்படி செயல்படுவதை விட்டு விட்டு வருத்தங்களாலும், கவலைகளாலும் கழிக்கப்படும் காலங்கள் வீணடிக்கப்படுபவையே.

கடைசி வரை உங்களால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே. எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனம் வையுங்கள். நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் புலம்பலிலேயே கழித்து விடாதீர்கள். புலம்பலிலும், வருத்தங்களிலும் நிலைமை மேலும் மோசமாகுமே தவிர எதுவும் மாறி விடாது, தீர்வும் கிடைக்காது.  தரப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் எப்படி முடிந்த அளவு சிறப்பாக செயல்படலாம் என்று யோசித்து அதன்படி செயல்படுங்கள். மோசமான சூழ்நிலைகளும் சிறிது சிறிதாக மாறி உங்களை மேலான சூழ்நிலைகளுக்குப் போக வழிவிடுவதைக் காண்பீர்கள்.

நமக்கு முழுக்கட்டுப்பாடு இருப்பது இந்தக் கணத்தில் தான் என்பதால் வாழ்க்கையின் வெற்றியின் சூட்சுமம் முழுவதும் இந்தக் கணத்தில் தான் இருக்கிறது. நதி நீரோட்டத்தில் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை காலை நனைக்க முடியாது என்று சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே இருக்கிறது. கால ஓட்டத்திலும் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. நாம் இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொருத்தே இது நமக்கு அனுகூலமாவதும், பயனற்றுப் போவதும் தீர்மானமாகிறது.

காளிதாசர் சொன்னது போல நம் விடியலுக்கான தீர்வு இந்தக் கணத்தில் தான் உள்ளது. மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்தில் வையுங்கள். ஏதாவது சாதிக்க ஆசைப்படுகிறீர்களா? அதற்கான பிள்ளையார் சுழியை இந்தக் கணத்தில் போடுங்கள். நாளை செய்யலாம் என்று விட்டு வைப்பவைகளை நாம் என்றுமே செய்வதில்லை. ஏனென்றால் நாளை என்பது நம்மிடம் வருவதேயில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் இந்தக் கணம் மட்டுமே. இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.

–நன்றி வல்லமை

நூலின் பெயர் – வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
நூலின் ஆசிரியர் – என்.கணேசன்
நூல் வெளியான ஆண்டு – 2013
பக்க எண்ணிக்கை – 141
விலை – ரூ-110/-
பதிப்பக முகவரி – BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
Tel : 044 43054779

நூலின் ஆசிரியர் பற்றி:

நூலின் ஆசிரியர் என்.கணேசன் அவர்கள் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறார். வேலை மற்றும் குடும்ப கடமைகளின் மத்தியிலும் படிப்பவர்களை மேம்படுத்தும் விதமாக சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்கள் தன்னம்பிக்கை, மன அமைதி, நற்பண்புகள், அறிவார்ந்த ஆன்மீகம் போன்ற நல்ல விஷயங்களை உணரச்செய்வதுடன் அவற்றை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பின்பற்ற தூண்டுகிறது.

இந்த நூல் யாருக்காக?

சிலர் தங்கள் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் சில மனிதர்களாலும், இக்கட்டான சூழ்நிலைககளாலும் எதிர்பாரா சம்பவங்களாலும் மிக முக்கியமான தன்னம்பிக்கை, மன அமைதி,காலம் ஆகியவற்றை இழந்து விரக்தி அடைகிறார்கள். அதன் பின் என்ன வாழ்க்கை இது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? இதற்கு சுற்றி இருப்பவர்கள் காரணமா இல்லை என்னுடைய வாழ்க்கை முறை தான் காரணமா ? நான் காரணமென்றால் வாழ்கையைச் சரியாக வாழ்வது எப்படி ? போன்ற கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்களுக்கு இந்நூல் ஒரு விலைமதிப்பில்லா பொக்கிஷமாகும்.

சிலர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அனுபவங்கள் உணர்த்தும் உண்மைகளை தவற விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வாழ்கையை வாழத் தொடங்குபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்.

இயல்பாகவே கற்றுக்கொள்ளும் திறனாலும்,வளர்ப்பு முறையாலும், சூழ்நிலையாலும் வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் மற்றவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும்.


திட்டமில்லாமல் திண்டாடாதீர்கள் –என்.கணேசன்

$
0
0

ganesan

வாழ்க்கையில் அலட்டிக் கொள்ளாமல் அதிகம் சாதித்த மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் கடுமையாக உழைப்பது போல் பார்வைக்குத் தெரியாது. ஆனாலும் அவர்கள் நிறைய சாதனைகள் புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கை முறையைக் கூர்ந்து பார்த்தால் அதற்கு காரணம் கண்டிப்பாக விளங்கும். அவர்கள் திட்டமிட்டு ஒரு ஒழுங்குமுறையுடன் செயல்படுபவர்களாக இருப்பார்கள்.

அந்தோணி ராபின்ஸ் என்ற பிரபல சுயமுன்னேற்ற எழுத்தாளர் திட்டமில்லாமல் வாழ்பவர்கள் நயாகரா சிண்ட்ரம் (The Niagara Syndrome) என்ற பிரச்னையில் கண்டிப்பாக ஒரு நாள் மாட்டிக் கொள்வார்கள் என்று கூறுகிறார். அந்தப் பிரச்னையில் திட்டமில்லா மனிதர்கள் எப்படி மாட்டிக் கொள்கிறார்கள் என்பதை அவர் வார்த்தைகளிலேயே பார்ப்போம்.

“வாழ்க்கையை ஒரு நதியாகச் சொல்லலாம். பெரும்பாலான மக்கள் எங்கே போய் முடிய வேண்டும் என்ற சிந்தனை இல்லாமலேயே அதில் குதித்து விடுகின்றனர். விரைவிலேயே வாழ்க்கை நதியின் அவ்வப்போதைய நீரோட்டத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அப்போதைய நிகழ்வுகள், அப்போதைய பயங்கள், அப்போதைய சவால்களை எதிர்கொள்வதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கிறார்கள். வாழ்க்கை நதியில் கிளைகள் வரும் போதும் அவர்கள் எந்தப் பக்கம் போவது என்றோ, எதில் செல்வது இலாபகரமானது என்றோ கவனம் கொடுத்து தீர்மானிப்பதில்லை. தானாக எதில் கொண்டு போய் விடுகிறதோ அதில் பயணிக்கிறார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

இப்படி அரை மயக்கத்தில் செல்லும் வாழ்க்கையிலிருந்து அவர்களைத் தட்டி எழுப்புவது தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் ஓசை தான். விழித்துக் கொள்ளும் போது தான் நயாகரா நீர்வீழ்ச்சிக்கு ஐந்தடி தூரத்தில் துடுப்பில்லாத படகில் வேகமாக வந்து கொண்டு இருப்பது தெரிகிறது. ஆனால் அந்த நேரத்து ஞானோதயம் காலம் கடந்ததாக இருந்து விடுகிறது. அந்த வீழ்ச்சியில் விழுந்தே தீர வேண்டியிருக்கிறது. அது உணர்ச்சிகளின் வீழ்ச்சியாக இருக்கலாம், ஆரோக்கியத்தின் வீழ்ச்சியாக இருக்கலாம், பொருளாதார வீழ்ச்சியாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக சரியான முடிவுகளைத் திட்டமிட்டு எடுத்திருந்தால் இதைக் கண்டிப்பாக தடுத்திருக்க முடியும்.”

திட்டமிடா விட்டாலும் வாழ்க்கை நகரத்தான் போகிறது. ஆனால் அது போகும் பாதை நமக்கு அனுகூலமாக இருக்கத்தான் வாய்ப்பில்லை. அந்தோணி ராபின்ஸ் கூறுவது போல அது ஏதோ ஒரு வீழ்ச்சியில் என்றோ ஒரு நாள் உங்களை வீழ்த்தக் கூடும். திட்டமில்லா மனிதர்களுக்குத் திறமையும், உழைப்பும், உற்சாகமும் பெரிதாக பயன்பட்டு விடப்போவதில்லை. காரணம் அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. காட்டாறு போலப் பிரவாகம் எடுத்து வரும் அனைத்தும் கட்டுப்பாடான கரைகளுக்குள் இல்லாமல் கண்டபடி எல்லா பக்கங்களிலும் போவதால் சீக்கிரமே வடிந்து விடுகிறது. அதனால் ஒரு சமயத்தில் பிரம்மாண்டமாகத் தெரிகிற வளர்ச்சி இன்னொரு சமயத்தில் கண்ணிற்கே தென்படுவதில்லை.

திட்டமிடாதவர்கள் வாழ்க்கையை அவர்களைத் தவிர அனைவரும் தங்கள் விருப்பத்திற்கு நகர்த்துகிறார்கள். மற்ற சூழ்நிலைகளும் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. மற்ற மனிதர்களும் சூழ்நிலைகளும் தீர்மானிக்கும் போது அதை எதிர்க்கும் சக்தி திட்டமில்லா மனிதர்களுக்கு இருப்பதில்லை.

வாழ்க்கை என்ற நீண்ட ஓட்டத்தை விடுங்கள். ஒரு விடுமுறை நாள் என்ற குறுகிய காலம் கூட திட்டம் என்று ஒன்று இல்லா விட்டால் நமக்கு பயன்படும்படி அமைவதில்லை. அந்த நாளில் ஒரு பகுதியை வம்புப் பேச்சு கழித்து விட முடியும். இன்னொரு பகுதியை டிவி திருடிக் கொண்டு விட முடியும். இன்னொரு பகுதியைத் தேவையோ, உபயோகமோ இல்லாத இன்னொரு செயல் இழுத்துச் சென்று விட முடியும். மீதிப்பகுதியை சோம்பலோ, ஊர்சுற்றலோ எடுத்துக் கொண்டு விட முடியும்.

ஆனால் முன்கூட்டியே திட்டம் என்று ஒன்றிருக்குமானால், நாம் செய்ய வேண்டியவை இன்னதெல்லாம் என்று முன்கூட்டியே தீர்மானம் ஒன்று இருக்குமானால் அந்த நாளை மேலே சொன்ன எதுவும் நம்மிடம் இருந்து பிடுங்கிச் சென்று விட முடியாது. அதற்கான அவகாசத்தையே நாம் தந்து விடப் போவதில்லை.

திட்டமிட்டால் மட்டும் அப்படியேவா நடத்தி விட முடிகிறது என்ற நியாயமான கேள்வியைக் கேட்கலாம். நாம் ஒன்று நினைத்தால் நாம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலை அத்தனை திட்டத்தையும் பாழடிக்கிற மாதிரி வந்து சேரலாம். அது தான் வாழ்க்கையின் யதார்த்தமும். ஆனால் திட்டம் என்று ஒன்று இருக்கையில் அந்த சூழ்நிலையில் இருந்து எவ்வளவு வேகமாக வர முடியுமோ அந்த அளவு வேகமாக வெளியே வந்து விடுகிறோம். முன்னமே திட்டம் இட்ட சில வேலைகளையாவது செய்து முடிக்கிறோம்.

நமக்கு என்னவெல்லாம் ஆக வேண்டி இருக்கிறது, நம் வாழ்க்கை எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்ற தெளிவு நமக்கு உறுதியாக இருக்குமானால் அது நம் தினசரி வாழ்க்கையிலேயே சிறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்ய வைக்கும். பாதை விலக ஆரம்பிக்கும் போதெல்லாம் ஆரம்பத்திலேயே உணர வைத்து மாற வைக்கும். தேவை இல்லாத, பயனில்லாத செயல்களில் இறங்க ஆரம்பத்திலேயே அனுமதிக்காது. நம் சக்தியையும், காலத்தையும் வீணாக்குவது மிக மிகக் குறையும். ஊர் வம்பில் சேர்வதற்கோ, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதற்கோ நம்மை அது விடாது. இப்படி நமக்குப் பயன்படுவதற்கு மட்டுமல்லாமல் அடுத்தவரைத் தொந்திரவு செய்யாமல் இருப்பதற்கும் திட்டமிட்டுச் செயல்படுவது உதவும்.

திட்டமில்லாத மனிதர்கள் கடைசி நேரத்தில் பரபரப்பு காட்டுவார்கள். என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு கடைசி நேரத்தில் தான் உறைக்கும். நயாகரா சிண்ட்ரம் என்று அந்தோணி ராபின்ஸ் சொன்னது போல என்ன நிலவரம் என்பது வீழ்ச்சிக்கு முன்னால் தான் புரியும். அந்த நேரத்தில் என்ன தான் ஆர்ப்பாட்டம் செய்தாலும், அதிக வேகமும், செயல்திறனும் காட்டினாலும் அது பயன் தருவது மிக அபூர்வமே.

ஒரு நாளை, ஒரு வாரத்தை, ஒரு மாதத்தை, ஒரு வருடத்தை, மொத்த வாழ்க்கையை இப்படி இருக்க வேண்டும், இத்தனை சாதிக்க வேண்டும் என்று திட்டமிடுங்கள். உங்கள் திட்டம் நூறு சதவீதம் நிறைவேறாது. முன்பே சொன்னது போல நாம் நினைத்திராத எத்தனையோ தடைகளும், சூழ்நிலைகளும் வந்து சேரலாம். அதற்கென்று திட்டமே வேண்டாம் என்று முடிவு கட்டி  விடாதீர்கள். தடைகளைத் தாண்ட முடியுமா என்றும் சூழ்நிலைகளை மாற்ற முடியுமா என்றும் பாருங்கள். முடிந்தால் செய்யுங்கள். அப்போது தான் நம் திறமைகளே நமக்கு அறிமுகமாகும்.  அப்படி முடியா விட்டாலும் எவ்வளவு சீக்கிரம் அதிலிருந்து விடுபட்டு பழையபடி திட்டமிட்ட வாழ்க்கைக்கு வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்பி வாருங்கள். செய்ய வேண்டியதைத் தொடர்ந்து செய்யுங்கள்.

திட்டமிடும் வாழ்க்கையில் 100 சதவீத வெற்றி கிடைக்காமல் போனாலும் சுமார் 60 சதவீத வெற்றியாவது கிடைக்கும். ஆனால் திட்டமே இல்லாத வாழ்க்கையில் ஒரு சதவீதம் கூட வெற்றி நமக்கு நிச்சயமல்ல. மேலும் திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் எதிர்பார்த்த நன்மைகள் நினைத்த அளவுக்கு கிடைக்கா விட்டாலும் தீமைகள் கண்டிப்பாக விளைய வாய்ப்பே இல்லை. ஆனால் திட்டமிடாத வாழ்க்கையில் தீமையே அதிகம் விளையும். எனவே திட்டமிடுங்கள். வாழ்க்கையை ஒரு அர்த்தத்தோடு கொண்டு செல்லுங்கள். அப்படிச் செய்தீர்களானால் பின்னால் என்றும் நீங்கள் வருந்தக் காரணமிருக்காது.

–நன்றி வல்லமை

நூலின் பெயர் – வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
நூலின் ஆசிரியர் – என்.கணேசன்
நூல் வெளியான ஆண்டு – 2013
பக்க எண்ணிக்கை – 141
விலை – ரூ-110/-
பதிப்பக முகவரி – BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
No 7/1 3rd Avenue, Ashok Nagar,
Chennai-600 083
Tel : 044 43054779

நூலின் ஆசிரியர் பற்றி:

நூலின் ஆசிரியர் என்.கணேசன் அவர்கள் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறார். வேலை மற்றும் குடும்ப கடமைகளின் மத்தியிலும் படிப்பவர்களை மேம்படுத்தும் விதமாக சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்கள் தன்னம்பிக்கை, மன அமைதி, நற்பண்புகள், அறிவார்ந்த ஆன்மீகம் போன்ற நல்ல விஷயங்களை உணரச்செய்வதுடன் அவற்றை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பின்பற்ற தூண்டுகிறது.

இந்த நூல் யாருக்காக?

சிலர் தங்கள் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் சில மனிதர்களாலும், இக்கட்டான சூழ்நிலைககளாலும் எதிர்பாரா சம்பவங்களாலும் மிக முக்கியமான தன்னம்பிக்கை, மன அமைதி,காலம் ஆகியவற்றை இழந்து விரக்தி அடைகிறார்கள். அதன் பின் என்ன வாழ்க்கை இது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? இதற்கு சுற்றி இருப்பவர்கள் காரணமா இல்லை என்னுடைய வாழ்க்கை முறை தான் காரணமா ? நான் காரணமென்றால் வாழ்கையைச் சரியாக வாழ்வது எப்படி ? போன்ற கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்களுக்கு இந்நூல் ஒரு விலைமதிப்பில்லா பொக்கிஷமாகும்.

சிலர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அனுபவங்கள் உணர்த்தும் உண்மைகளை தவற விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வாழ்கையை வாழத் தொடங்குபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்.

இயல்பாகவே கற்றுக்கொள்ளும் திறனாலும்,வளர்ப்பு முறையாலும், சூழ்நிலையாலும் வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் மற்றவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும்.



நூல் விமர்சனம் –காற்றின் குரல் –திருப்பூர் கிருஷ்ணன்

$
0
0

தெய்வீ க இலக்கியமான இராமாயணத்தை நினைத்த நேரத்தில், நினைத்தபடி அனுபவித்து மகிழலாம். ஒவ்வொரு சிறு நிகழ்வையும் மையப்படுத்தி எத்தனையோ சிறுகதைகளைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில், தேர்ந்த இலக்கியவாதியான திருப்பூர் கிருஷ்ணன் தமக்கே கைவந்த எளிய நடையில் பல காட்சிகளைக் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

சரயூ நதியில் கலந்து மறைய முடிவெடுத்த ஸ்ரீ ராமன் முன்னால், பூமியிலிருந்து களிமண்ணால் செய்த சிலைபோல, அளவற்ற அழகோடு தலையில் மகுடம் தரித்தவளாக ஒரு தேவி தோன்றுகிறாள். அவர் சொல்கிறார், நான் உனக்கு மாமியார் ஆவேன்.”

ஆமாம் ஜனகபுத்ரியான சீதாதேவியை இவ்வுலகுக்குத் தந்தவள் மாமியாராகத்தானே ஆக வேண்டும் இராமனுக்கு? ஜனகரின் மனைவி மாமியாராவது அப்புறம்தானே?

இதுபோன்ற நயமான கற்பனைகள். வால்மீகி ராமாயணத்தில் ஊறித் திளைத்து மகிழ்ந்த தம்முடைய தாயார் எடுத்துத் தந்த பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் இந்தக் கதைகளை எழுதியிருப்பதாகப் பவித்திரமான நன்றியோடு குறிப்பிடுகிறார். ‘காற்றின் குரல்’ தொகுப்பில் 44 மலர்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன்.

‘அந்த ஒரு கிண்ணம்’, ‘எண்ணப்படும் நாட்கள்’, ‘மரம் கேட்ட வரம்’ போன்ற கவித்துவமான தலைப்புகளில் இந்தக் கதைகளைப் படிக்கும்போது இராமாயணக் காலத்தில் நாமும் வாழ்வது போன்ற தெய்விக அனுபவம் கிடைப்பது, எழுத்தில் கிடைக்கும் மந்திர ஜாலம் தான்.

காற்றின் குரல் – திருப்பூர் கிருஷ்ணன். திருப்பூர் குமரன் பதிப்பகம், தொலைபேசி – 044-23771473. ரூ. 250.

–நன்றி கல்கி


1-சென்னையில் மேன் ஹாட்டன் –சுஜாதா

$
0
0

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இரவு பத்தரை மணிக்கு சொகுசுப் பேருந்து வந்தது. மெத்தை போட்டு உள்ளே குளிர்வித்த இருக்கைகளில் அத்தனை பெண்களையும், ஆண்களையும் வாரிச் சுருட்டிக் கொண்டு தரமணிக்கு விரைந்து, கால் சென்டரில் கொண்டு போய்க் கொட்டியது.

அர்ச்சனா கையெழுத்துப் போட்டு விட்டு உள்ளே போனாள். வெல்கம் அமெரிக்கா என்று அறிவித்தது வாசல்படி.

டயட் பெப்சி, கோக், கேக், சாண்ட்விச், பெர்கர், நொறுக்குத் தீனி சமாச்சாரங்கள் நிறைந்திருந்தன. கை துடைத்துக் கொள்ள காகிதக் குட்டைகள் இருந்தன. பெரிய கண்ணாடி ஜாடிகளில் டிகேஃப், ரெகுலர் என்று காபி சதா சூடாக இருந்தது. ஹாலில் வரிசையாக டெர்மினல்கள். அருகில் காதில் மாட்டிய ஹெட் செட், உதட்டருகே மைக் வைத்து கீ போர்டில் பெண் விரல்கள் விளையாடின.

சாம்சுப்பு என்று சட்டைப் பையில் பெயர் எழுதிய சூப்ரண்ட் மேசையில், சிறிய அமெரிக்கக் கொடி வைத்திருந்தது. “எல்லாம் படிச்சுட்டியாம்மா மனப்பாடமா?”

“ஆச்சு சார்.”

“கால் மீ சாம். எங்கே முதல் வாக்கியத்தைச் சொல்லு?”

“அஜாக்ஸ் கால் சென்டர். மே ஐ ஹெல்ப் யூ?”

“அஜாக்ஸ் இல்லை. ஏஜாக்ஸ். ஏ. ஏ. தமிழை மற முதல்ல.”

“ஏஜாக்ஸ்”

“மெல்லப் பேசு. அங்க இருக்கறவங்கல்லாம் பொழுது போகாத கிழங்க. ரொம்பத் தனிமையான மனுசங்க. பணம் வச்சிருக்கறவங்க. ஆனா அவங்கக் கிட்ட ஒரு கனெக் ஷனோ, க்ரெடிட் கார்டோ, ஒரு விடுமுறையோ விக்கறத்துக்குள்ளே தாவு தீர்ந்துடும். நூறு கேள்வி கேட்பாங்க. முதல்ல உயிரோட இருக்கார்னு ஊர்ஜிதப்படுத்திக்கணும். இப்ப அங்க விண்டர், விபூதி கொட்டற மாதிரி ஸ்னோ பொழியும். மைனஸ் பதினெட்டு டிகிரி. உம்பேர் என்ன?”

“அர்ச்சனா.”

அவர் விழிகள் கோபத்தில் விரிந்தன. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்தக் கட்டடத்துக்குள் வந்த உடனே உம்பேர் அர்ச்சனா இல்லை. ஸேரா. உன் மொழி அந்த ஐம்பது வாக்கியங்கள்தான். அதுக்கு மீறி ஏதும் பேசக் கூடாது.”

“சாரி சார்.”

“மறுபடியும் ‘சார்!’ அமெரிக்காவில் யாரும் யாரையும் சார்னு கூப்பிடமாட்டாங்க தெரியுமா? உச்சரிப்பு தவறக் கூடாது. ‘லாஃப்’னு சொல்லக் கூடாது. ‘லேஃப், ‘லேஃப்’ சொல்லு!

“லேஃப்” என்று பயத்துடன் சிரித்தாள்.

“தட்ஸ் பெட்டர்.”

“சீட்ல உக்கார். சேர்ந்து எத்தனை நாளாச்சு?”

“பதினைஞ்சு நாள் சார்.”

“பரவாயில்லை. சில பேர் ஒரு நாள்லேயே ஓடிப் போயிடறா. போட்டிக் கம்பெனிக்காரங்க அதிக சம்பளம் குடுக்கறேன்னு டெம்ப்ட் பண்ணுவாங்க. நம்ம கம்பெனி மாதிரி பெண்களுக்குப் பாதுகாப்பு எங்கேயும் கிடையாது. எதுவா இருந்தாலும் எங்கிட்ட சொல்லிட்டுப் போ. திடுதிப்புனு விலகக் கூடாது. ரைட்? ராத்திரி வீட்டுக்குப் போறப்ப செக்யூரிட்டி வரானோல்லியோ?”

டெர்மினலில் உட்கார்ந்து சாதனங்களை ஆபரணங்கள் போல மாட்டிக் கொண்டாள். திரையில் வரிசையாக எண்கள் தெரிந்தன. ஒவ்வொன்றாக கம்ப்யூட்டரே டயல் செய்து இணைத்து இவளிடம் கொடுத்தது. ஹாய் திஸ் இஸ் ஏஜாக்ஸ் கால்சென்டர். ஹவ் யு டுயின். என்ன பாஷை இது! எல்லாமே பொய், பெயர் பொய், தேசம் பொய், பேச்சு பொய், சம்பளம் மட்டும் நிஜம்.

ஜார்ஜ் மூன்றாவது க்யூபிகிள்ளிலிருந்து எழுந்து ஹாய் ஸேரா என்று கையசைத்தான். இயற் பெயர் சேஷாத்ரி.

“எனக்கென்னவோ இந்த வேலை பிடிக்கவே இல்லை அர்ச்சு. ராத்திரியெல்லாம் கண் முழிச்சா உடம்பு என்னத்துக்கு ஆறது. பகல்ல வேலை கிடைக்காதா? கண்ணெல்லாம் பாரு பொங்கிக் கிடக்கு.”

“பாரும்மா இந்தச் சம்பளம் கிடைக்காது. எல்லா சேஃப்ட்டியும் இருக்கு. செக்யூரிட்டி, எஸ்கார்ட் இல்லாம கடைசியா பெண்களைக் கொண்டு விடறுதுங்கற பேச்சே இல்லை. ஆம்பளைத் துணை இல்லாம அனுப்ப மாட்டா.”

“அதெல்லாம் சரிதான். அந்த ஆம்பளைத்துணையே.”

“பேக்கு மாதிரி பேசாதே. என் கூட வேலை செய்யற ‘கைஸ்’ (guys) எல்லாம் அப்பாவிங்க. நாங்க அவங்களை கலாட்டா செய்வோம். ஜார்ஜ் என்ன ஒரு மரியாதையா, பண்பாடா வெட்கப்பட்டுண்டு பேசறான், தெரியுமா?”

“வெள்ளைக்காரனா?”

“இல்லைம்மா, சேஷாத்ரீக்கு ஆஃபீஸ்ல ஜார்ஜ்னு பேரு. எல்லாருக்கும் வேற பேரு. என் பேரு ஸேரா.”

“என்ன எழவோ, எல்லாம் பொய்யா இருக்கு. எனக்கு எதுவும் பிடிக்கலை. சீக்கிரமா பகல் வேலையா பார்.”

“நமக்கு ராத்திரி, அவர்களுக்கு பகல்ம்மா. ஜெயந்தி கோர்ஸ் முடியற வரைக்குமாவது இருந்தாகணும்.”

“இந்தச் சம்பளம் பகல்ல கிடைக்காதா?”

“கிடைக்காதம்மா, பாதிதான் கிடைக்கும். ஜார்ஜ் கிட்டயும் சொல்லி வச்சிருக்கேன்.”

“என்ன ஜார்ஜோ, என்ன ஸேராவோ! எல்லாரையும் கிறிஸ்தவாளா மாத்தாம இருந்தா சரி.”

சொல்லி வைத்தாற் போல் வெள்ளிக்கிழமை ட்யூட்டி முடிந்ததும் சேஷாத்ரி, “உங்களுக்கு டே ஜாப் வேணுமா அர்ச்சனா?” என்று கேட்டான்.

“என்ன சம்பளம்?”

“இதே சம்பளம். இன் ஃபாக்ட் இதைவிட பெர்க்ஸ் அதிகம். மெடிகல் ரீ இம்பர்ஸ்மென்ட், பெட்ரோல் சார்ஜ்.”

“என்ன வேலை?”

ஒரு ஐடி கம்பெனியில் கஸ்டமர் கேர்ல கொஞ்சம் ஸ்மார்ட்டா இருக்கற பெண்ணா வேணும்னாரு. கம்பெனி பேர் கேட்டா அசந்துருவீங்க.”

சொன்னான். “சென்னையிலேயே பெரிய ஐடி கம்பெனி. இன்ட்ரஸ்ட் இருந்தா காலையில சென்மேரிஸ் ரோடில அவங்க ஆபீசுக்கு கூட்டிட்டுப் போறேன்.”

அவனை வாத்சல்யமாகப் பார்த்தாள்.

“சேஷாத்ரி உங்க உதவிக்கு நான் என்ன, அது என்ன?”

“கைம்மாறா? பேசப்படாது. உங்களுக்கு இஷ்டமிருந்தா, நேரமிருந்தா, ட்யூட்டி விட்டு காலைல வீட்டுக்குப் போறதுக்கு முன்னால, எங்க வீட்டுக்கு வந்து என் சிஸ்டரையும், அம்மாவையும் சந்திச்சா போதும். அதுவே பாக்கியம்.”

“எதுக்கு?”

“சும்மாத்தான். உங்களைப் பத்தி அவங்ககிட்ட சொல்லிருக்கேன். பார்க்க விரும்பறா. பயப்படாதீங்க.”

“ச்சே பயம்னு இல்லை. தயக்கம்தான்.”

“என்ன வர்றீங்களா?”

“இன்னிக்கா?”

“உங்களுக்கு சௌகரியப்படும்னா இன்னிக்கே. வெள்ளிக்கிழமை நல்ல நாள்.”

யோசித்தாள்.

“சரி அட்ரஸ் சொல்லுங்க.”

“அட்ரஸ் கண்டுபிடிச்சு மாளாது. நான் கூட்டிட்டுப் போறேன். வேளச்சேரி பஸ் ஸ்டாண்டுக்கு அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுங்க. நான் பைக்ல வந்து அழைச்சுட்டுப் போறேன். காலைல வர்றீங்களா?”

“சரி.”

இந்த மாதிரி நல்லவர்களும் இருக்கிறார்களா என்ன என்று எண்ணினாள். மனசுக்குள் சின்னதாக ஒரு படபடப்பு. ஏன் என்று புரியவில்லை. பயமா, எதிர்பார்ப்பா?

இதன் தொடர்ச்சி விரைவில்…

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல்தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.


2-சென்னையில் மேன் ஹாட்டன் – சுஜாதா

$
0
0

இதன் முந்தைய பகுதி…

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

அதிகாலை அகல அலுமினிய பாத்திரங்களில் பால் பாக்கெட்டுகளை விதவைகள் சேகரித்துக் கொண்டிருந்த சமயம். மற்றபடி நடமாட்டமில்லை. சூரியன் தோன்றலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம். முதல் காகங்களும், அணில்களும் கூவத்தொடங்கிய வேளை.

சேஷாத்ரி சொன்ன ஸ்டாப்பில் அர்ச்சனா இறங்கியபோது யாரையும் காணோம். சட்டென்று மிகத் தனியாக உணர்ந்தாள். இந்த ஸ்டாப்பிலேயா இறங்கச் சொன்னான் என்ற சந்தேகம் வந்தது. ஒரு வேளை அவன் சொன்னது அடுத்த ஸ்டாப்போ? சரி அது வரை நடந்து போகலாம் அல்லது ஆட்டோ ஏதாவது வருமா பார்த்தாள். ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ஒருவன் இறங்கினதும் ஆட்டோ விலகிச் சென்றது. இறங்கினவன் அவளை நோக்கி நடந்தான். இவனை எங்கே பார்த்திருக்கிறேன்? இவள் நடக்க அவனும் தொடர்ந்தான். ‘நில்லு’ என்றான். இவளுக்கு வயிற்றில் பயம் கவ்விக் கொள்ள, வேகமாக நடக்க, அவன் காலடிகள் கிட்டே வருவது கேட்டது.

“ச்சே எங்கே இந்த சேஷாத்ரி? என்ன முட்டாள் நான் ? அவனைப் பார்க்காமல் தனியே இறங்கியிருக்கக் கூடாது. இப்போ என்ன செய்வது?” அவன் ஏதோ சொல்கிறான். என்ன சொல்கிறான் என்று பீதியில் சரியாகப் புரியவில்லை. மிக அருகே வந்து விட்டான். சுற்றிலும் பார்த்தாள். எதிர்புறத்தில் சாலையோரம் வீடு கட்ட செங்கல் அளவில் கான்க்ரீட் ப்ளாக்குகள் இருந்தன.

“நில்லுன்னு சொல்றேன்ல” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள், அவைகளில் ஒன்றை எடுத்து அவன் மண்டை மேல் வீசி எறிந்தாள். அவன் அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு சரிந்து விழுந்தான். அவள் ஓடத் துவங்கினாள். கொஞ்ச நேரம் ஓடினதும் அருகே மோட்டார் பைக் சத்தம் கேட்க சேஷாத்ரி.

“அப்பாடா… கடைசில வந்தே! எங்க போய்த் தொலைஞ்சே? ஒரு ஆளு ஒரு ஆளு என்னைத் துரத்திண்டு வந்து என்ன என்னவோ சொல்றான்.”

“என்ன சொன்னான்?”

“பயத்தில் ஏதும் புரியலை.”

“சரி விடு.”

“பாத்தா நம்ம கம்பெனி செக்யூரிட்டி ஆள் மாதிரி இருந்தான். பின்னாலேயே வந்தான். எனக்கு ரொம்ப பயம்மாய்டுத்து. மண்டைல ஒரு கல்லை எடுத்துப் போட்டுட்டு ஓடியே வந்துட்டேன்.”

“ஸேரா ஐ எம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி, ஸாரி. நான் லேட்டா வந்தது தப்பு. இவ்வளவு அதிகாலை இந்த ஏரியாவுக்கு வரச் சொன்னது முட்டாள்தனம். இனிமே பயமில்லை பைக்ல ஏறிக்க.”

அவள் பைக்கில் ஏறிக்கொள்ள, பைக் சீறிப் புறப்பட்டது.

அன்புள்ள வாசகருக்கு, இந்தக் கதையை இந்த சுபமான இடத்தில் முடித்திருந்தேன். இதை அச்சேறுமுன் படித்துப் பார்த்த நண்பர், ‘அடிபட்ட ஆள் யார், அவன் என்ன ஆனான் என்பதைச் சொல்ல வேண்டும். அப்போதுதான் கதை முழுமை பெறுகிறது’ என்றார். அவர் சொன்னது சரிதான். சொல்லிவிடுகிறேன்.

இதன் இறுதிப்பகுதி விரைவில்…

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல்மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.


3-சென்னையில் மேன் ஹாட்டன் – சுஜாதா

$
0
0

இதன் முந்தைய பகுதி…

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

கடையில் பலகைகளை நீக்கித் திறக்கும்போது, டீக்கடைக்காரர் ஓரத்தில் கிடந்தவனைப் பார்த்தார். அரைமயக்கத்தில் இருந்தவரை ஆசுவாசப்படுத்தி உட்கார வைத்துப் பேச முடிந்ததும்,

“என்னங்க, இந்தாங்க டீ சாப்பிடுங்க. என்ன ஆச்சு. மூச்சு வாங்குது. தலைல ரத்தம் வருது.”

அவர் ஒரு வகையாகச் சுதாரித்துக் கொண்டு, “அந்தப் பொண்ணு, அந்தப் பொண்ணு” என்றார்.

“எந்தப் பொண்ணுங்க? இங்க யாரும் பொண்ணு இல்லையே.”

“ஐயோ எங்க கம்பெனி பொண்ணு ஒண்ணை, சில பசங்க சேர்ந்துகிட்டு கடத்திட்டுப் போக திட்டம் போட்டிருக்கிறதா செக்யூரிட்டிக்குத் தகவல் கிடைச்ச உடனே அனுப்பிச்சாங்க. அந்தப் பொண்ணை எச்சரிக்கை செய்யலாம்னு ஆட்டோ புடிச்சு ஓடியாந்தேன். சொல்றதுக்குள்ள தலைமேல கல்லைப் போட்டுட்டு ஓடிப் போயிருச்சுங்க.”

****

“ஏன் நிறுத்திட்டே?”

“அவங்களும் வரட்டும்.”

“யாரு?”

“மைக், மிக்கி, லென் எல்லாரும் வராங்க, ஸேரா.”

“சேஷாத்ரி என்னடா சொல்றே கடன்காரா!”

“நான் சேஷாத்ரி இல்லை. ஜார்ஜ். அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம்டி.”

–நிறைவடைந்தது.

மீண்டும் தூண்டில் கதைகள் - Meedum Thoondil Kathaigal

இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995-ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல்மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள் இந்நூலில்.


ஸ்ரீ ரமணானுபவம்! –நூல் விமர்சனம்

$
0
0

யெஸ்பால்

பாலகுமாரனின் கவித்துவ நடையில் வெளியாகியுள்ள இந்த நூலைப் படிக்கும்போது, இன்னும் சிலர் மீது பொறாமை உண்டாகிறது.

வேங்கடராமனிடம் இரண்டரை அணாதான் இருக்கிறது என்று தெரிந்தபோது, சாப்பாட்டுக்கான விலை இரண்டு அணாவைப் பெற்றுக் கொள்ளாமல் வேண்டாம். அந்த இரண்டணாவை நீயே வைத்துக் கொள்” என்று சொன்ன புண்யாத்மாவான விழுப்புரம் ஹோட்டல்காரர்…

கீழூர்க் கோவிலில், தம்முடைய பங்கான பட்டை சாதத்தை, அந்தச் சிறுவனுக்குத் தரும்படி சொன்ன மேளக்காரர்…

இவர்கள் எல்லாம் எத்தனைப் பேறுபெற்றவர்கள். இவர்களின் வாரிசுகளையாவது அடையாளம் காண முடியுமோ? அதிகம் இல்லை. சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வாழ்ந்தவர் பகவான் ரமணர். பாலகுமாரன் சொல்கிற மாதிரி அவருடைய வாழ்க்கை, சம்பவங்கள் நிறைந்தது அல்ல. வெறும் சம்பவங்களும் அல்ல; சம்பவங்களின் அடுக்கு அல்ல. அந்தச் சம்பவங்களுக்குள்ளே புகுந்து அவர் வாழ்க்கை என்ன சொல்கிறது என்பது நமக்குப் புரிய வேண்டும்.”

உள்ளார்ந்த தேடல் என்பது யாரோடும் கைகோத்துக் கொண்டு வருகிற விஷயம் அல்ல. கும்பலாக தியானத்தில் ஈடுபடுவதும், ஆன்ம விசாரம் செய்வதும் தொந்தரவைத் தரும். இது அவரவர் கர்ம வினைப்படி நடக்கிற விஷயம். எனவே தனித்துத்தான் இருக்க வேண்டும். தனிமைதான் இன்னும் சரியான கோணத்தில் உள்ளே திருப்பும்” என்று ஒரு ராமசாமி அய்யரின் அனுபவத்தைப் பற்றி எழுதுகிறார் பாலகுமாரன்.

இதுதானே நிஜமான ரமணானுபவம்! அருமையான நூல். படிக்கப் படிக்க நம்மை எங்கோ உள்ளிழுத்துப் போகிற ஆனந்தம் கிடைக்கிறது.

ஸ்ரீ ரமண மகரிஷி, பாலகுமாரன், விகடன் பிரசுரம், சென்னை – 2. விலை ரூ.160

–நன்றி கல்கி


Viewing all 178 articles
Browse latest View live